இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தப்பட்ட சொகுசு கார் மீட்பு: தப்பியோடிய கும்பலுக்கு வலை

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலைப் பகுதியில் இருந்து சொகுசு கார் ஒன்றில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு, குறித்த சொகுசு காரை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும், பொலிஸாரின் கட்டளையை மீறி காரை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்திச் சென்ற ஓட்டுநர், வழியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அத்தாபெந்திவெவ வீதியினூடாகத் தப்பிச் சென்ற அக்காரை, தம்பவெவ குறுக்கு வீதியில் உள்ள காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர்.

பின்னர், காரில் இருந்த போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தப்பியோடிய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர புலனாய்வு விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை