அரசியல் இலங்கை செய்தி

வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நேரடியாகத் தலையிடுவேன்: சஜித் உறுதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிவதே இச்சந்திப்பின் முதன்மை நோக்கமாக அமைந்திருந்தது.

இச்சந்திப்பின்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் விரிவாகக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அப்பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும், அம்மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க, எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாம் நேரடியாகத் தலையீடு செய்து செயலாற்றுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை