இலங்கை செய்தி

அம்பியூலன்ஸ் சாரதியின் கவயீனத்தினால் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்?

  • April 24, 2026
  • 0 Comments

திருகோணமலை, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸின் சாரதி அதனை மெதுவாக ஓட்டிச் சென்றுள்ளார் என தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹதிவுல்வெவ – தெவனிபியவ இந்ராராம விகாரையின் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன தேரரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மஹதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த சுரங்க திஸாநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பு காரணமாக கடந்த 19ஆம் திகதி வைத்தியசாலையில் […]

உலகம் செய்தி

ஈரான் ஆபத்தான நாடாக மாறக்கூடும்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானுடன் மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்களின் பங்களிப்பு அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் Kaja Kallas வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு இல்லாமல் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் முந்தைய 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை விட பலவீனமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணுசக்தி விவகாரங்களுடன் சேர்த்து ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் நிழல் யுத்த நடவடிக்கைகள் போன்ற பிராந்தியப் பாதுகாப்பு […]

இலங்கை

​ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

  • April 24, 2026
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் […]

பொழுதுபோக்கு

படத்தின் கதை மாற்றப்பட்டதால் விலகினார் நயன்தாரா!

  • April 24, 2026
  • 0 Comments

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என போற்றப்படும் நயன்தாரா, பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், முதலில் தொடங்கவிருந்த வரலாற்று படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால், படத்தின் கதையினை படக்குழுவினர் மாற்றிவிட்டார்கள். தற்போது புதிய கதை முடிவாகி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே பல்வேறு படங்களில் நடித்து வருவதாலும், கதை மாற்றத்தாலும் பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகும் […]

உலகம் செய்தி

உள்நாட்டு விமான சேவையை நாளை ஆரம்பிக்கிறது ஈரான்!

  • April 24, 2026
  • 0 Comments

  ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் முக்கிய நகரமான மஷ்ஹத் இடையிலான விமானப் போக்குவரத்து நாளை (25) சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. நாட்டின் வான்வழிப் பாதையை படிப்படியாகத் திறக்கும் அரசாங்கத்தின் நான்கு கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்ரல் 18 முதல் ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கிய நிலையில், முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. புனிதத் தலங்களைக் கொண்டுள்ள […]

செய்தி

விடுதலைக்காக ஒலித்த குரல்களுக்கு நன்றி: கடத்தப்பட்ட ஊடகர் உருக்கம்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்க சுயாதீன ஊடகவியலாளர் Shelly Kittleson , தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக நன்றி தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு பெற்ற மிலிஷியா குழுவினராலேயே இவர் கடத்தி செல்லப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னை மீட்பதற்காகப் பாடுபட்ட அரச அதிகாரிகள் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடக அமைப்புகள் மற்றும் நண்பர்களின் தீவிர முயற்சியால் தனது விடுதலை சாத்தியமானதாக Shelly Kittleson குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

உலக அமைதிக்கான நடை பயணத்தில் பிரதமர் பங்கேற்பு!

  • April 24, 2026
  • 0 Comments

உலக அமைதியை வலியுறுத்தி “அமைதிக்கான நடைபயணம்” எனும் மகுடத்தின் கீழ் அமெரிக்காவில் 110 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்ட வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், தற்போது இலங்கையில் தமது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர். தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராமய வரை முன்னெடுக்கப்படும் இந்த அமைதி நடைபயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு, இன்று (ஏப்ரல் 24) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஸ்ரீ […]

இந்தியா செய்தி

இந்திய வான் வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் மே 24 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதையடுத்து ஏப்ரல் 30-ம் திகதி முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதேபோல தமது வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு பாகிஸ்தானும் தடை விதித்திருந்தது. இவ்வாறு […]

இலங்கை

சீன சிகரட்டுக்களுடன் இருவர் கைது

  • April 24, 2026
  • 0 Comments

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று (24) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 42 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 53 வயதுடைய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

அமைதி பேச்சை மீள ஆரம்பிக்கவும்: ஈரான், அமெரிக்காவுக்கு திருத்தந்தை அழைப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுக்குமாறு திருத்தந்தை லியோ, அறைகூவல் விடுத்துள்ளார். போரினால் அப்பாவி மக்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களைக் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மோதல்களைத் தவிர்த்து சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அமெரிக்க ஜனாதிபதியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், வெறுப்புணர்வை விடுத்து அமைதி கலாச்சாரத்தை வளர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார். லெபனான் பயணத்தின் போது தான் சந்தித்த சிறுவனொருவர் போரில் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, வன்முறைக்கு […]