அரசியல் செய்தி

முடிவுக்கு வந்தது எதிரணியின் சத்தியாக்கிரகம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்காக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், சுரேஷ் சலேவுக்கு நீதி கோரியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது.

முன்னாள் அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, டிரான் அலஸ் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச,

“ மூன்று நாட்களாக முன்னெடுத்துவந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவருகின்றோம்.

சுரேஷ் சலேவின் உடல் நிலை குறித்து பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐவர் கொண்ட விசேட மனநல மற்றும் தடயவியல் மருத்துவக் குழுவொன்றை நீதிமன்றம் நியமித்துள்ளது.

அந்தகுழு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்வரை நாம் போராட்டத்தை கைவிடுகின்றோம். அந்த குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி இல்லையெனில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகும்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை