இலங்கை செய்தி

வரலாற்று சாதனை படைத்த மோடிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகிக்கும் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், இந்த மைல்கல் சாதனை என்பது இந்திய மக்கள் அவரது தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மோடியின் தலைமையின் கீழ் நாடு அடைந்துள்ள மாற்றத்தையும் அங்கீகரித்துள்ளார்.

இக்காலக்கட்டத்தில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றியதன் மூலம் இலங்கை பல நன்மைகளைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக இலங்கை எதிர்கொண்ட சவாலான காலங்களில் இந்தியா வழங்கிய தொடர்ச்சியான நட்பு மற்றும் ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை