இந்தியா செய்தி

காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து தமிழக முதல்வர் விஜய் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று டெல்லிக்கு புறப்பட்டார்.

முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்ததும் , காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு நடத்தினார்.

கடந்த முறை டெல்லி சென்ற போது சோனியாவை சந்திக்காமல் முதல்வர் சென்னை திரும்பிய நிலையில் இம்முறை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார்.

அத்துடன், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் முதலமைச்சர் விஜய் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி