தள்ளாடும் வயதிலும் மகனுக்காக களமிறங்கிய தந்தை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அநுராதபுரத்தில் இன்று (12) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.
தள்ளாடியபடியே பாதுகாவலர்களின் உதவியுடன் மேடையேறிய மஹிந்த ராஜபக்ச, கதிரையில் அமரவைக்கப்பட்டார். அவர் உரையாற்றவில்லை.
நாமல் ராஜபக்ச தலைமையிலேயே இக்கூட்டம் நடைபெற இருந்தது. எனினும், அவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதால் அவர் சார்பிலேயே மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.




