அரசியல் இலங்கை செய்தி

மகனுக்காக மேடையேறிய மஹிந்தவுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய சாட்டையடி

" தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. தவறிழைத்தவர்களும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுமே சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, போலி கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. தவறிழைத்தவர்களும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுமே சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, போலி கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை சரிவர செய்யும். இது விடயத்தில் எவருக்கும் மன்னிப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

“பாதாள குழுக்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. முற்றாக துடைத்தெறியப்படும். மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. போதைப்பொருள் வியாபாரமும் ஒழிக்கப்படும்.

எவரையும் அரசியல் ரீதியில் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லை. விசாரணைகள் சிறப்பாக இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளின் பிரகாரம் – சட்டத்துக்கமையவே தண்டனை வழங்கப்படுகின்றது. இது பழிவாங்கலா?

எமக்கு எவருடனும் தனிப்பட்ட குரோதம் கிடையாது. ஆனால் இந்த நாட்டை அழித்த ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

மகன் கொள்ளையடிக்கும்போது, மகனே அவ்வாறு செய்ய வேண்டாம் என தந்தை கூறி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், கைது செய்த பின்னர் அழுது அனுதாபம் தேடுவதில் பயன் இல்லை.

மகனுக்கு கொள்ளையடிக்க இடமளித்துவிட்டு, கைது செய்ததும் கண்ணீர் சிந்துகின்றனர். அனுதாபம்மூலம் இதனை தடுத்துவிடமுடியாது.” – என்றார் ஜனாதிபதி.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை