ஐரோப்பா

போலந்தில் விநோதம் – AI தொழில்நுட்பத்திற்கு எதிராக ரோபோக்கள் போராட்டம்!

போலந்தின் வர்சா நகரில் ரோபோக்கள் விநோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ரோபோ தொழில்நுட்பம் ஆகியவை வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

ஒலிபெருக்கிகள் ஊடாக “வேலைத் தளங்களைப் பாதுகாத்திடுங்கள்”, “சட்டங்களை இயற்றுவதற்கான நேரம் இது. தாமதிக்காமல் முறைப்படுத்துங்கள்” போன்ற கோஷங்களை ரோபோக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

‘Democratism’ அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், மனித வடிவிலான (Humanoid) ரோபோக்கள் மற்றும் நான்கு கால் விலங்குகளைப் போன்ற (Quadrupeds) ரோபோக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்