இதன் மூலம் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: பலி எண்ணிக்கை உயர்வு

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் காயமடைந்து, நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சிறைச்சாலையில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல கைதிகளில், தற்போதைய பலியானவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் தகவல்படி, இதுவரை உயிரிழந்தவர்களில் ஏழு சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குகின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு […]

" சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தின் சுயாதீனத்தில் கையடிப்பு: எதிரணி குற்றச்சாட்டு

  • July 7, 2026
  • 0 Comments

” சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சூளுரைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “இலங்கையை ஆட்சிசெய்த தலைவர்கள் சட்டத்தின் சுயாதீனத்தன்மையில் கையடிக்கவில்லை. அவ்வாறு கையடித்த தரப்பினருக்கு கடைசியில் வீட்டுக்கு செல்ல நேரிட்டது. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதமர் மேத்யூ வேல் (Matthew Wale) ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உடன்படிக்கை மற்றும் கல்வி, சுகாதாரத்திற்கான புதிய நிதியுதவிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவின் அணு ஆயுதப் பாய்ச்சல்: கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா

  • July 7, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைக்கு (ICBM) சாலமன் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சாலமன் தீவுகளின் பிரதமர் மேத்யூ வேல் (Matthew Wale) ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான உடன்படிக்கை மற்றும் கல்வி, சுகாதாரத்திற்கான புதிய நிதியுதவிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது, பசிபிக் பிராந்தியத்தில் […]

Belgium beats USA செய்தி விளையாட்டு

அமெரிக்காவை வீழ்த்தியது பெல்ஜியம்

  • July 7, 2026
  • 0 Comments

சியாட்டில் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2026 ஆட்டத்தில் அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி கால்இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. சார்லஸ் டி கெட்டேலாரே (Charles De Ketelaere) அடித்த இரண்டு கோல்கள், ஹான்ஸ் வனாகன் (Hans Vanaken) தனது உலகக் கோப்பை வரலாற்றில் பதிவு செய்த முதல் கோல் மற்றும் மாற்று வீரராக களம் புகுந்த ரொமேலு லுகாகு (Romelu Lukaku) கடைசி நேரத்தில் அடித்த கோல் ஆகியவை பெல்ஜியம் […]

டல்லாஸில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் போர்த்துகள் அணி 1-0 எனத் தோல்வியடைந்து வெளியேறியது. செய்தி விளையாட்டு

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்: வெளியேறியது போர்த்துகள்

  • July 7, 2026
  • 0 Comments

டல்லாஸில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் போர்த்துகள் அணி 1-0 எனத் தோல்வியடைந்து வெளியேறியது. இதன் மூலம் போர்த்துகள் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை பயணம் ஏமாற்றத்துடன் முடிவடைந்தது. எனினும், தனது சர்வதேச கால்பந்து எதிர்காலம் குறித்து அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க அவர் தயாராக இல்லை. திங்கள்கிழமையன்று ‘மிக்ஸட் ஜோன்’ (Mixed Zone) பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, மாற்று வீரராக […]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

நாளை ஆஸ்திரேலியா செல்கிறார் மோடி – பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

  • July 7, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குரிய பயணத்தை பிரதமர் மோடி நேற்று ஆரம்பித்தார். முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியா வரவுள்ளார். ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமுகத்தினர், நாளை வியாழக்கிழமை மெல்போர்னுக்கு வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பிரம்மாண்டமான பாலிவுட் பாணி நிகழ்வோடு வரவேற்க தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியா-இந்தியா வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் ஜூலை 8 முதல் […]

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு என்பது வெறும் தேசிய அளவிலான விடைபெறல் மட்டுமல்ல, தெஹ்ரானில் திரண்டிருந்த அந்த மக்கள் பெருங்கடல், இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த நினைத்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வீழ்த்த நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் கற்பித்த ஈரான் மக்கள்

  • July 6, 2026
  • 0 Comments

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு என்பது வெறும் தேசிய அளவிலான விடைபெறல் மட்டுமல்ல, தெஹ்ரானில் திரண்டிருந்த அந்த மக்கள் பெருங்கடல், இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த நினைத்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கிய போரினால் ஈரான் பலவீனமடைந்ததாகத் தெரியவில்லை. மாறாக, அது சவால்களுக்கு அடிபணியாத, ஒன்றுபட்ட, தங்களின் அடுத்தகட்ட நகர்வை தாங்களே […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கை செய்தி

பதவி விலகுமாறு நீதி அமைச்சருக்கு அழுத்தம்

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பதவியை விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று (06) வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் சுமார் 600 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். ஆனால், அங்கு 2,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர். இந்த இடநெருக்கடிப் பிரச்சினை நீண்டகாலமாகவே நிலவி வருகின்றது. எனவே, தற்போதைய […]

இலங்கை செய்தி

சிறைக்குள் நடந்தது என்ன? விசாரணை தீவிரம்

  • July 6, 2026
  • 0 Comments

07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகள் உயிரிழப்புநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. 23 அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் என்பன விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன எனவும் அமைச்சர் கூறினார். நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் அதனைசூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

“வரி சக்தி 2026” எனும் தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையில் தேசிய வரி வாரம் ஆரம்பம்

  • July 6, 2026
  • 0 Comments

“வரி சக்தி 2026” எனும் தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையான எண்ணமாக மாற்றி, நாட்டில் சுயமாக வரி செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் “வரி சக்தி 2026” என்பது ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஒரு வேலைத்திட்டமாகும். இதன் ஆரம்பத்தைக் குறிக்கும் விசேட தேசிய வரி வாரம் […]