சட்டத்தின் சுயாதீனத்தில் கையடிப்பு: எதிரணி குற்றச்சாட்டு
” சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சூளுரைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“இலங்கையை ஆட்சிசெய்த தலைவர்கள் சட்டத்தின் சுயாதீனத்தன்மையில் கையடிக்கவில்லை. அவ்வாறு கையடித்த தரப்பினருக்கு கடைசியில் வீட்டுக்கு செல்ல நேரிட்டது.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திண்டாடுகின்றது.
இதனால் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் அணிதிரளும்போது, சட்டத்துறைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு முற்படுகின்றது.
சட்டத்தின் சுயாதீனத்தை பாதுகாப்பதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” – என்றார் ரஞ்சித் மத்தும பண்டார.




