இந்தியா

தன் தோலினால் செய்த காலணிகளை தன் தாய்க்கு பரிசாக அளித்த மத்திய பிரதேச இளைஞன்!!

  • March 23, 2024
  • 0 Comments

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்தவர் ரவுனக் குர்ஜார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை ரவுடிகள் பட்டியலில் பொலிஸார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவர் தனது சொந்த தோலில் இருந்து செய்யப்பட்ட காலணிகளை தனது தாய்க்கு பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. ரவுனக் குர்ஜார் ஒரு முறை பொலிஸாரால் சுட்டு பிடிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது தொடைப்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில், அதில் தோல் அகற்றப்பட்டது. அந்த தோலை செருப்பு தொழிலாளியிடம் […]

இலங்கை

புத்தளம் – விபத்தில் பெண்ணொருவர் பலி மூவர் வைத்திசாலையில் அனுமதி!

  • March 23, 2024
  • 0 Comments

புத்தளம் – கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி (43) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர். புத்தளம் தள வைத்தியசாலையில் […]

இலங்கை செய்தி

இலங்கை தேர்தல்! ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – பசில் அறிவிப்பு

  • March 23, 2024
  • 0 Comments

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், குறித்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இணையத்தில் அச்சுறுத்தலாக மாறும் புதிய ஆபத்து – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

  • March 23, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இணையம் ஊடாக இடம்பெறும் துஷ்பிரயோகங்களில் இருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இணைய வசதியுள்ள சாதனங்கள் மூலம் குழந்தைகள் ஒன்லைன் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதால், சைபர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு குயின்ஸ்லாந்து பொலிஸார் பெற்றோரை வலியுறுத்தியுள்ளனர். ஒரு கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒருவர், பெற்றோரின் மேற்பார்வையின்றி தங்கள் படுக்கையறையில் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரியவந்துள்ளது. துப்பறியும் கான்ஸ்டபிள் கிறிஸ் டூஹே […]

பொழுதுபோக்கு

25 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரபு தேவா- ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி

  • March 23, 2024
  • 0 Comments

25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா மற்றும் ஏ.ஆர் ரகுமான் இணையும் திரைப்படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூப்பர் கூட்டணியின் புதிய படத்தை முதன் முதலாக ‘பிகைண்ட்வுட்ஸ்’ சார்பில் மனோஜ் தயாரித்து, இயக்க உள்ளார். இப்படத்தில் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன. காமெடி நடிகர் யோகி பாபு இதில் வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

Apple நிறுவனம் மீது வழங்கு தாக்கல் செய்த அமெரிக்கா!

  • March 23, 2024
  • 0 Comments

Apple நிறுவனம் மீது அமெரிக்காவின் நீதித் துறையும் 15 மாநிலங்களும் அதன் மீது வழக்குத் தொடுத்துள்ளன. Apple நிறுவனம் கையடக்க தொலைபேசி சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், Apple கையடக்க தொலைபேசிசந்தையில் அதிகாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஐபோன் மீதான கட்டுப்பாட்டை பரந்த, நீடித்த மற்றும் சட்டவிரோத நடத்தையில் ஈடுபட பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. iPhone கையடக்க தொலைபேசிகளை விற்பனை […]

வாழ்வியல்

வியர்வை துர்நாற்றத்தை விரட்டியடிக்க இலகு வழிமுறைகள்!

  • March 23, 2024
  • 0 Comments

கோடைக் காலத்தில் வியர்ப்பது பொதுவாக அனைவருக்கும் சகஜமான ஒன்றுதான். ஆனால், சிலர் காலையில் எழுந்து சந்தோஷமாக குளித்து விட்டு, வீட்டிலுள்ள வாசணை திரவியங்களை பூசிக்கொண்டு வெளியில் செல்வார்கள். வெளியில் சென்று 30 நிமிடங்கள் கூட இருக்காது, வியர்வை வாடை வர ஆரம்பித்து விடும். வியர்வை ஏற்படுத்தும் சுரப்பிகள் எக்ரைன், அபோக்ரைன் என அழைக்கப்படுகின்றன. இதில், உடலின் பல பகுதிகளில் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் சுரக்கும் சுரப்பி எக்ரைன் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் அக்குள், நெஞ்சுப்பகுதி, […]

இலங்கை

கடனில் சிக்கிய இலங்கையின் பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம் – IMF

  • March 23, 2024
  • 0 Comments

கடனில் சிக்கியுள்ள இலங்கையின் பொருளாதார நிலைமைகள் முன்னேற்றமடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் பொருளாதார நிலை இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து படிப்படியாக முன்னேறத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. பணவீக்கம் 2022 ஆம் ஆண்டு உச்சமாக இருந்த 70 சதவீதத்திலிருந்து கடந்த மாதம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது மற்றும் ஒன்றரை வருட நெருக்கடியை தொடர்ந்து கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நாட்டின் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp அறிமுகம் செய்யும் புதிய அம்சம்!

  • March 23, 2024
  • 0 Comments

பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு புதிய அம்சங்களை தொடர்ந்து அப்டேட்டுகள் மூலம் வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில், வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள், ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையில் ஒரு அம்சத்தை வெளியிட்டிருந்தது. ஆனால், profile view mode-வை ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் என்றும் தனியுரிமை பாதுகாப்பு காரணமாக இதுபோன்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு வாட்ஸ்அப்பில் புதிய (chat search feature) அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. […]

அரசியல் தமிழ்நாடு பொழுதுபோக்கு

விருதுநகர் தொகுதிக்காக மோதும் ராதிகா மற்றும் விஜயகாந்த் மகன் பிரபாகரன்… பக்கத்துல யாருப்பா?

  • March 23, 2024
  • 0 Comments

லோக்சபா தேர்தலில் தென் தமிழ்நாட்டின் விருதுநகர் தொகுதி தற்போது விஐபி தொகுதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா சரத் குமார், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கக் கூடும் என்பதால் தேசிய அளவில் கவனம் பெறும் தொகுதியாகி இருக்கிறது விருதுநகர். விருதுநகர் தொகுதியாக மாறிய பின்னர் நடைபெற்ற முதல் […]