அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp அறிமுகம் செய்யும் புதிய அம்சம்!

பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு புதிய அம்சங்களை தொடர்ந்து அப்டேட்டுகள் மூலம் வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில், வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள், ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையில் ஒரு அம்சத்தை வெளியிட்டிருந்தது.

ஆனால், profile view mode-வை ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் என்றும் தனியுரிமை பாதுகாப்பு காரணமாக இதுபோன்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு வாட்ஸ்அப்பில் புதிய (chat search feature) அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தங்களது உரையாடல்களை தேதி வாரியாக பார்க்க வழிவகுத்தது.

அதேசமயம், இன்ஸ்டாகிராம் போல, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு அம்சங்கள் வாட்ஸ் அப்பில் வந்த வண்ணம் உள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் உரையாடலை டெக்ஸ்டாக மாற்றும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, வாட்ஸ்அப்பில் வாய்ஸ் உரையாடலை டெக்ஸ்டாக மாற்றும் அம்சம் தற்போது சோதனையில் இருந்து வருவதாகவும், முதலில் iOS பயனர்களுக்கு, பின்னர் Android பயனர்களுக்கும் பீட்டா வெர்சனாக கொண்டுவந்து சோதனை நடைபெற்று வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. எனவே இந்த புதிய அம்சம் விரைவில், அனைத்து பயனர்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த அம்சம் பயனர்களுக்கு குரல் செய்திகளை டெக்ஸ்ட் வடிவில் தெரிந்துகொள்ள உதவுகிறது. இது பயனர்களுக்கு மாற்று தகவல்தொடர்பு வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தொடர்பு மற்றும் பிற வசதியை மேம்படுத்த இந்த அம்சம் வழிவகுக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content