ஆசியா

பாலஸ்தீன நிலத்தை பறிமுதல் செய்த இஸ்ரேல்: ஜெர்மனி கடும் கண்டன்ம

800 ஹெக்டேர் பாலஸ்தீன நிலத்தை இஸ்ரேல் பறிமுதல் செய்ததை ஜெர்மனி கண்டித்துள்ளது. இஸ்ரேலிய அரசாங்கம் இந்த வார தொடக்கத்தில் 800 ஹெக்டேர் பாலஸ்தீனிய நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்து அவற்றை அரசுக்கு சொந்தமான இஸ்ரேலிய நிலமாக அறிவித்ததை ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் ஒரு அறிக்கையில் கண்டித்துள்ளது. “இது 30 ஆண்டுகளுக்கும் மேலான மிகப்பெரிய ஒதுக்கீடாக இருக்கும்” என்று அது X இல் பதிவிட்டுள்ளது. “குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன மற்றும் இந்த மிகவும் பலவீனமான சூழ்நிலையில் மேலும் பதட்டங்களைத் […]

இலங்கை

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோடி : சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

  • March 25, 2024
  • 0 Comments

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. குறித்த நபர் கொழும்பு 07, விஜேராம மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் அவர் வைத்தியராகவும் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு […]

உலகம்

பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : மூவர் பலி!

  • March 25, 2024
  • 0 Comments

பப்புவா நியூகினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 470 மைல்கள் தொலைவில் பதிவான நிலநடுகத்தினால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டதுடன்,  1000 வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் வடக்கே அமைந்துள்ள தென் பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா, கடந்த ஆண்டு ஏப்ரலில் இரண்டு பூகம்பங்களால் பாதிக்கப்பட்டது,  

இலங்கை

இலங்கையில் மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் : 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

  • March 25, 2024
  • 0 Comments

இப்பாகமுவ – பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் குழுவிற்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு தனியார் கல்வி நிறுவனமொன்றில் நேற்று (24.03) இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 03 ஆண் மாணவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும், 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு

என்ன மறுபடியும் கல்யாணமா? போஸ்ட் போட்ட வனிதா… 18 வயசுல இப்படியா?

  • March 25, 2024
  • 0 Comments

நடிகை “வனிதா விஜயகுமார்” தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். இதன்போது வனிதாவிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு வனிதாவும் தாறுமாறாக பதிலளித்துள்ளார். இதில் ரசிகர் ஒருவர், “உங்களுக்கு அடுத்த கல்யாணம் எப்போ…?” என்று கேட்க அதற்கு வனிதா, “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று வனிதா பதில் கொடுத்து இருக்கிறார். மேலும், “உங்களுடைய மகன் அல்லது உங்கள் அப்பா இருவரில் யாரை உங்களுக்கு பிடிக்கும்” என்று கேட்ட கேள்விக்கு, “என்னை யாருக்கு பிடிக்கிறதோ அவரை […]

ஆசியா

அதிபர் கிம்-மை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள ஜப்பானிய பிரதமர்…

  • March 25, 2024
  • 0 Comments

தென்கொரியா மற்றும் அமெரிக்காவு தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதும் வட கொரியா, இரு நாடுகளுக்கும் எதிராக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வடகொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இந்த விடயத்தில் வடகொரியா- அமெரிக்காவுடன் ஜப்பான் இணைந்து வடகொரியாவை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை […]

பொழுதுபோக்கு

படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த சமந்தா!

  • March 25, 2024
  • 0 Comments

‘சிட்டாடல்’ படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். மையோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா, தான் திடீரென மயங்கி விழுந்த தகவலை தனது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா மையோசிடிஸ் நோயால் பல வருடங்களாக அவதிப்பட்டு வரும் நிலையில், இதற்காக சிகிச்சை எடுப்பதற்காக கடந்த ஆறேழு மாதங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த நேரத்தில், தனது உடல்நலன் தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றை ஆரம்பித்து தனது நண்பரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷுடன் […]

ஐரோப்பா

ஹங்கேரியில் கார் பேரணியில் ஏற்பட்ட விபத்து : நான்கு பேர் பலி!

  • March 25, 2024
  • 0 Comments

ஹங்கேரியில் கார் பேரணியின் போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹங்கேரியில் நடைபெற்ற மோட்டார் பந்தயத்தின் போது, ​​தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பார்வையாளர்கள் பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்தப் போட்டி வடக்கு ஹங்கேரியில் நடைபெற்றது. எவ்வாறாயினும், விபத்து இடம்பெற்ற விதம் இதுவரை வெளியாகவில்லை. காயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. போட்டியை […]

இலங்கை

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

  • March 25, 2024
  • 0 Comments

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் கூறி, அவ்வாறு அழைத்து செல்லப்படவுள்ள ஊடகவியலாளர்களுடன் ஊடகவியலாளராக உங்களையும் அழைத்து சென்று கனடாவில் இறக்கி விடுவதாக யாழ்ப்பாண இளைஞன் ஒருவரிடம் கூறியுள்ளார். அதற்காக சிலருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், ஊடக நிறுவனம் ஒன்றிடம் இருந்து […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் மைத்திரி!

  • March 25, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என திரு மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இதன்படி, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணியளவில் குற்றப் […]