ஐரோப்பா

பிரித்தானியாவில் வாள்வெட்டு தாக்குதல்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்த போராடும் அரசாங்கம்!

  • May 12, 2024
  • 0 Comments

பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கடுமையான சட்ட விதிகளை கொண்டுவரும்போது வாள்வெட்டு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வகையான ஆயுதங்கள் மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கும் என்பதால் பலர் குழந்தைகள் உள்பட பலர் இதில் சிக்கிக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கத்தி குத்து தாக்குதல்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இவை மக்களை பீதியடையவைத்துள்ளதுடன், எதிர்காலம் பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது. லண்டனில், இத்தகைய குற்றங்கள் 20% உயர்ந்துள்ளதாக […]

ஆசியா

மலேசியா – கோலா குபு பாரு இடைத்தேர்தலில் பிரதமர் அன்வார் கூட்டணி வெற்றி

  • May 12, 2024
  • 0 Comments

சிலாங்கூரின் கோலா குபு பாரு தொகுதிக்கு மே 11ம் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) வேட்பாளர் பாங் சோக் தாவ், 14,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். செல்லுபடியாகும் வாக்குகளில் இது கிட்டத்தட்ட 57.2 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டது. மலேசிய ஆளும் கூட்டணிக்கான ஆதரவு நிலவரத்தைக் காட்டுவதாக இந்த இடைத்தேர்தல் கருதப்பட்டது. கோலா குபு பாருவில் மூன்று தவணைக் […]

மத்திய கிழக்கு

அணு ஆயுதங்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை… பதற்றத்தில் உலக நாடுகள்

  • May 12, 2024
  • 0 Comments

இஸ்ரேல்- ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் திடீரென அணு ஆயுதங்கள் குறித்து மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் சில காலமாகவே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- ஈரான் இடையேயும் மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் சில வாரங்களுக்கு முன்பு மாறி மாறி தாக்கிக் கொண்டது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது. இதற்கிடையே அணு ஆயுதங்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை […]

ஆசியா

இந்தோனேசியாவில் சாரதியின் செயலால் நேர்ந்த விபரீதம் : 11 பேர் பலி!

  • May 12, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஸ் பிரேக் போடாததால் பல கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 53 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டமளிப்பு விழாவுக்காக பயணித்த மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து ஏற்படுவதற்கு […]

இலங்கை

இலங்கை – பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது குழுந்தை பலி!

  • May 12, 2024
  • 0 Comments

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது. ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. நேற்று (11) வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

ரஷ்யாவின் உள்ள எண்ணெய் ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்; மூவர் பேர் பலி!

  • May 12, 2024
  • 0 Comments

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபடுகின்றன. அந்தவகையில் ரஷ்யாவின் ரோவென்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள ஒரு எண்ணெய் ஆலை தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்குள்ள வீடுகள், வாகனங்கள் போன்றவை சேதமடைந்தன. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அந்த எண்ணெய் ஆலையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. எனினும் அங்கு வேலை பார்த்த 3 தொழிலாளர்கள் […]

பொழுதுபோக்கு

விஜய், கமல் வரிசையில் அரசியலில் கால் பதிக்கும் சிங்கம்… சத்தமில்லாமல் போட்ட பிள்ளையார் சுழி

  • May 12, 2024
  • 0 Comments

விஜய் கோட் படத்தை முடித்த கையோடு தளபதி 69ல் நடிக்க உள்ளார். இதற்கு அடுத்து முழு நேர அரசியல் பயணத்தை தொடங்கும் அவர் 2026 தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கு போட்டியாக சூர்யாவும் அரசியலுக்கு அடித்தளம் நாட்ட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே இவருடைய நற்பணி இயக்கம் மூலம் பல விஷயங்களை செய்து வருகிறார். அதன்படி இந்த இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில் தற்போது வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான […]

வட அமெரிக்கா

கனடாவில் சீக்கிய தலைவர் கொலை – சிக்கிய நான்காவது நபர்

  • May 12, 2024
  • 0 Comments

கனடாவில் சீக்கியப் பிரிவினைவாத தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேர் 4ஆவது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். Amandeep Singh என்ற 22 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்மீது கொலை செய்ததாகவும் கொலை செய்யச் சதி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. சுடும் ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பில் ஏற்கெனவே குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் (Hardeep Singh Nijjar) கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் […]

செய்தி வாழ்வியல்

இரத்த அழுத்தத்தை குறைக்கும் தர்பூசணி விதைகள்.!

  • May 12, 2024
  • 0 Comments

தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும் அறியாத எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தருகிறது. தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள்: தர்பூசணி விதையில் விட்டமின் சி ,விட்டமின் பி6, போலெட், நியாசின்,புரதம் அமினோ அமிலங்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்,ஒமேகா 6 பேட்டி ஆசிட் அதிகம் காணப்படுகிறது. தர்பூசணி விதைகளின் நன்மைகள்: நம் உடலானது அமினோ அமிலங்களை தானே உற்பத்தி செய்யும் […]

இலங்கை

ஐரோப்பிய நாடொன்றின் எல்லையில் சிக்கிய 5 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

  • May 12, 2024
  • 0 Comments

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் ஐவர் லத்வியா எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சோதனையின் போது இந்தக் குழு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு இரண்டு முதல் எட்டு வருடங்கள் வரையிலான […]