ஐரோப்பா செய்தி

சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடு தடை: பிரான்ஸ் ஜனாதிபதியிடமிருந்து பறந்த கடிதம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலாவொன்டர் லயனுக்கு , கடிதம் ஊடாக அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் ஒரே சீரான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பிரான்ஸ் ஜனாதிபதியினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள பயன்பாட்டிற்கான தடை விதித்து கொண்டுவரப்பட்ட சட்டம், அந்நாட்டின் அரசியலமைப்பு பேரவையால் கடந்த ஆகஸ்ட் மாதம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வயதை சரிபார்ப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் தனிநபர் இரகசிய காப்புச் சட்ட மீறல்கள் என்பனவே அதற்கான காரணமாகும்.

பிரான்ஸில் சட்டம் தற்காலிகமாக தோல்வியடைந்ததை அடுத்து, மெக்ரான் இந்த விடயத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான சட்டமாக்க முயற்சித்து வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி