அரசியல் இலங்கை செய்தி

2029 இல் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர்: சர்ச்சையைக் கிளப்பும் தேரர்

"2029 ஜனாதிபதித் தேர்தலில் நான் பொது வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். அப்போது எனக்கும் அநுரவுக்கும் இடையில்தான் போட்டி நிலவக்கூடும்" என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

“2029 ஜனாதிபதித் தேர்தலில் நான் பொது வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். அப்போது எனக்கும் அநுரவுக்கும் இடையில்தான் போட்டி நிலவக்கூடும்” என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாகச் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். எனவே, 2029 ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் மற்றும் பத்தரமுல்ல சீலரத்ன ஆகியோரே எஞ்சியிருக்கக் கூடும்.

அதாவது, களத்தில் தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறவே ஜனாதிபதி முற்படுகின்றார்” என்று உதய கம்மன்பில கூறியுள்ளாரே என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தேரர் மேலும் கூறுகையில், “சிலவேளைகளில் அவ்வாறு நடக்கலாம். நானும் அநுரகுமாரவும் குமார் குணரத்னமும் போட்டியிடும் நிலை வரலாம். என்னை மக்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பொது வேட்பாளராகக் கூட நிறுத்தலாம். 2029 இல் ஒன்று நான் ஜனாதிபதியாவேன், இல்லையேல் அவர்கள் ஜனாதிபதியாவார்கள். அதை மக்களே தீர்மானிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை