உலகம் செய்தி

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்தியது இத்தாலி!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இத்தாலி பிரதமர் இன்று (14) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான உறவுகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியின் இந்த கொள்கை மாற்ற முடிவானது மேற்காசியாவில் நிலவும் பதற்றமான போர் சூழலுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தமானது 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டுவருகின்றது. எனினும், இஸ்ரேலின் போர் நடவடிக்கை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு, இறகு போன்றே சரிவு

  • April 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தொடர்ந்து 43 நாட்களாக உயர்ந்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தற்போது எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லையென வாகன அமைப்பான RAC தெரிவித்துள்ளது. வளைகுடா பகுதியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதுடன், மொத்த சந்தைகளிலும் எரிபொருள் விலைகள் சரிவடைந்துள்ளன. ஆனால், முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடும்போது விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. பெட்ரோல் லீற்றருக்கு சுமார் 158 பென்ஸ் அளவில் விற்பனையாகிறது. டீசல் விலை லீற்றருக்கு சுமார் 192 பென்ஸ் வரை உயர்ந்துள்ளது […]

உலகம் செய்தி

மேற்காசிய போரால் பிரிட்டன் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு!

  • April 14, 2026
  • 0 Comments

மேற்காசிய போரால் பிரித்தானியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் International Monetary Fund (IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் சூழ்நிலையால் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வானது ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளைவிட பிரித்தானியாவிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வளர்ச்சி எதிர்பார்ப்பு கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த போர் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரிக்கும்போது மத்திய […]

உலகம் செய்தி

மந்தநிலையை நோக்கி நகரும் உலக பொருளாதாரம் – IMF கடும் எச்சரிக்கை

  • April 14, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்தால் உலக பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF), எச்சரித்துள்ளது. அமைப்பின் உலக பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில், எண்ணெய், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், 2026 ஆம் ஆண்டில் உலக வளர்ச்சி 02 சதவீதத்துக்கும் கீழ் குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1980 க்குப் பிறகு மிக கடுமையான உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு நெருக்கமான நிலை எனவும் IMF குறிப்பிட்டுள்ளது. முக்கிய எண்ணெய் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் நீர் விநியோகத் தடை -வாடிக்கையாளர்களை கைவிட்டதை ஒப்புக்கொண்ட தலைவர்

  • April 14, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் குளிர்காலத்தில் ஏற்பட்ட கடுமையான நீர் விநியோகத் தடைகளுக்கு பிறகு, வாடிக்கையாளர்களை நிறுவனம் கைவிட்டதாக நீர் நிறுவன தலைவர் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கென்ட் மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 24,000 வீடுகள் நீர் தடை அல்லது குறைந்த அழுத்த பிரச்சனைகளை எதிர்கொண்டன. பின்னர் மேலும் 30,000 வீடுகள் இதேபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் குழு முன்னிலையில் விசாரிக்கப்பட்ட போது, சவுத் ஈஸ்ட் நீர் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ் […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – ஈரான் திட்டவட்டம்

  • April 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்து எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லலையென ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் அரசு ஊடகமான IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், தற்போதைய நிலவரங்கள் குறித்து மட்டுமே இந்த தகவல்கள் பரிமாறப்பட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

ஈரானில் 270 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் தமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை மதிப்பிடும் பணியை ஈரான் ஆரம்பித்துள்ளது. ஈரானின் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் சுமார் 270 பில்லியன் டாலர்வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. கட்டிடச் சிதைவுகள் மற்றும் தொழிற்சாலை முடக்கத்தால் ஏற்பட்ட வருமான இழப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளில் போர் சேதம் தொடர்பில் […]

உலகம் செய்தி

மீண்டும் அமைதி பேச்சு! பாகிஸ்தான் கூறுவது என்ன?

  • April 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சு மீண்டும் நடைபெறக்கூடும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் Khawaja Asif நம்பிக்கை வெளியிட்டார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சு நடைபெற்றது. இது தோல்வியடைந்தையடுத்து ஈரான் துறைமுகங்கள்மீதான முற்றுகை எச்சரிக்கையை ட்ரம்ப் வெளியிட்டார். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாகிஸ்தான் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மக்கள் இலவச மின்சாரத்தைப் பெறும் வாய்ப்பு

  • April 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் மின்சார பயன்பாட்டில் புதிய மாற்றம் அறிமுகமாகியுள்ளது. வெப்பமான நாட்களில் அதிகளவான மின்சாரம் உற்பத்தியாகும் போது, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மலிவான அல்லது இலவச மின்சாரத்தைப் பெறக்கூடும் என தேசிய மின்சார அமைப்பை ஒருங்கிணைத்து இயக்கும் முக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை, மக்கள் மின்சாரத்தை உச்ச நேரங்களைத் தவிர்த்து பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் தற்போது, அதிக மின்சாரம் கிடைக்கும் நேரங்களில் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படும் புதிய நடைமுறை அறிமுகமாகிறது. இந்த திட்டத்திற்கு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பேசுபொருளான சவுத்போர்ட் சம்பவம் – ஏன் தடுக்கப்படவில்லை?

  • April 14, 2026
  • 0 Comments

சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பத்தை தடுக்க தவறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்தக் சம்பவம் இடம்பெற்றிருக்காது என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதையடுத்து குடும்பங்களின் சட்டப் பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன […]