பிரித்தானியாவில் மக்கள் இலவச மின்சாரத்தைப் பெறும் வாய்ப்பு
பிரித்தானியாவில் மின்சார பயன்பாட்டில் புதிய மாற்றம் அறிமுகமாகியுள்ளது.
வெப்பமான நாட்களில் அதிகளவான மின்சாரம் உற்பத்தியாகும் போது, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள்
மலிவான அல்லது இலவச மின்சாரத்தைப் பெறக்கூடும் என தேசிய மின்சார அமைப்பை ஒருங்கிணைத்து இயக்கும் முக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை, மக்கள் மின்சாரத்தை உச்ச நேரங்களைத் தவிர்த்து பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர்.
ஆனால் தற்போது, அதிக மின்சாரம் கிடைக்கும் நேரங்களில் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படும் புதிய நடைமுறை அறிமுகமாகிறது.
இந்த திட்டத்திற்கு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.
இதனூடாக கோடைக்காலத்தில் மின்சாரத்தை வினைத்திறனாக பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





