கடும் வெப்ப அலையுடன் போராடும் வடகொரியா – பாராம்பரிய உணவு முறைய பின்பற்ற அறிவுறுத்தல்
வடகொரியா வரலாறு காணாத வெப்ப அலையுடன் போராடி வருகிறது. அந்நாட்டில் தற்போது 36.7 டிகிரி செல்சியஸ் (98.1 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடும் வெப்பத்தைச் சமாளிக்க, வட கொரிய அரசு ஊடகங்கள் பாராம்பரியமான உணவு முறைகளை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன.
உதாரணமாக, நாய்க்கறி சூப், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சி தரும் உணவுகள் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.
அதேநேரம் அந்நாட்டின் அரச ஊடகங்கள், கிம் ஜாங் உன்னை, தனது மக்களுடன் சேர்ந்து கடுமையான சூழ்நிலைகளைத் தாங்கிக்கொள்ளும் ஒரு தலைவராகச் சித்தரித்து, அவர் கடந்த காலங்களில் கடுமையான வானிலையில் பணியாற்றிய நிகழ்வுகளை நினைவுபடுத்தியுள்ளன.
வெப்பம் தொடர்பான மரணங்கள் குறித்த தரவுகளை வட கொரியா வெளியிடாத நிலையில், அதன் அண்டை நாடான தென் கொரியா 20-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.




