ரஷ்யாவின் புதிய திட்டம் – நேட்டோ நாட்டின் மீது குறி
நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின் மீது ரஷ்யா சிறிய அளவிலான தாக்குதலை நடத்தி அவ் அமைப்பின் வலிமையை சோதிக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் மேற்கோள் காட்டப்பட்ட அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இணையவழித் தாக்குதல்கள், நாசவேலை அல்லது ஒரு சிறிய அளவிலான தரைவழி ஊடுருவல் ஆகியவை இடம்பெறலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யாவின் ட்ரோன்கள் ஊடுருவியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் மர்மப் பொருள் ஒன்று விமான ஓடுதளத்தில் இனங்காணப்பட்டதாக கூறப்பட்டது.
இவ்வாறாக நேட்டோ நாடுகளை குறிவைக்கும் சில சமிக்ஞைகள் வெளியாகியுள்ள நிலையில் உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.




