தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்திவருகின்றது. அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான், அமெரிக்காவுக்கிடையில் இணக்கம் எட்டப்பட்டிருந்தாலும், போரில் இருந்து விலக இஸ்ரேல் விரும்பவில்லை என்பது புலனாகின்றது. உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம் – மூவர் பலி

  • June 18, 2026
  • 0 Comments

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள Kfar Tebnit மற்றும் Zebdin ஆகிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். லெபனான் ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், எல்லையோரப் பாதுகாப்புப் பகுதிகளில் தங்களின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். லெபனானிலும் போர் நிறுத்தம் அவசியம் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. அதேபோல தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்பும் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுகிறது – புதிய ஆய்வில் தகவல்

  • June 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் நிலவுவதாகவும், முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் அமைதியாக இணைந்து வாழ முடியும் என்றும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின்படி, பிரித்தானிய பொதுமக்களில் 17 சதவீதம் பேர் முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சி நாட்டின் கலாச்சாரத்திற்கு ஒரு அடிப்படை அச்சுறுத்தல் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் 19 சதவீதம் பேர் இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம்கள் வெள்ளையர்களைப் போல பிரித்தானியர்கள் அல்ல என்று உடன்படவில்லை. கணக்கெடுப்பின்படி, பிரித்தானிய நகரங்களிலும் பெருநகரங்களிலும் முஸ்லிம்களும் முஸ்லிம் […]

சுரேஷ் சலே, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் என அவரது மனைவியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நிராகரித்தார். அரசியல் இலங்கை செய்தி

ஆடைகள் களையப்பட்டு சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு

  • June 18, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், ஆடைகள் களையப்பட்டு அவமதிக்கப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மேற்படி விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி, முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்படுவதாகவும் அமைச்சர் இன்று (18) சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணையின்போது சுரேஷ் சலே, கடுமையான முறையில் நடத்தப்பட்டார் மற்றும் அவமதிக்கப்பட்டார் என அவரது மனைவியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பட்ட […]

ஐரோப்பா

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி புகைப்பிடிப்பதை நிறுத்தினார் 

  • June 18, 2026
  • 0 Comments

இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, தான் புகைப்பிடிப்பதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். 49 வயதான ஜோர்ஜியா மெலோனி, பிரான்சில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடனான ஒரு முறைசாரா உரையாடலின்போது, ​​தான் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஐரோப்பியத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது, ​​மெலோனி, “விழிப்புடன் இருப்பதற்கு எனக்குக் காபி தேவை” என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் நகைச்சுவையாக சிகரெட்டுகளைக் குறிப்பிட்டார். அதற்கு இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா […]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி குறித்து மக்கள் மத்தியில் அச்சம்

  • June 18, 2026
  • 0 Comments

“இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.” இவ்வாறு மேற்படி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை மொத்தமாக 380 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது […]

இலங்கை

சித்திரவதைக் கூடம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த உத்தரவு

  • June 18, 2026
  • 0 Comments

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள நிலத்தடிச் சிறையில் கள ஆய்வு நடத்திய திருகோணமலை நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன், மேலதிக விசாரணைகளைத் தொடருமாறும், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். மேலும், முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையில் காணொளிக் காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். பதினொரு இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் போகச் செய்வதற்கும், மேலும் பலரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்வதற்கும் ‘கன்சைடு’ என […]

யாழில் ரயில் விபத்தில் பலியான ராணுவ சிப்பாயின் சடலம் இலங்கை செய்தி

யாழில் ரயில் மோதி ராணுவச் சிப்பாய் பலி

  • June 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், அரியாலை-நெளுக்குளம் பகுதியில் ரயிலுடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்,பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன. மேற்படி இராணுவச் சிப்பாய் அண்மையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். எனினும், விடுமுறைக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் நீண்ட […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

UAE இல் சமூக ஊடகத் தடை : அரபு நாடுகளில் இதுவே முதல்முறை

  • June 18, 2026
  • 0 Comments

ஐக்கிய  அரபு அமீரகம் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகத்  தளங்களை  அணுகுவதற்கான வயதெல்லையை  15 ஆக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும் முதல் அரபு நாடாக UAE திகழ்கிறது. இது தொடர்பான சட்டவரைபு இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்குவது, பயன்படுத்துவது அல்லது இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையின் காரணமாக, அவர்களால் உள்ளடக்கத்தைப் பதிவிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ, பகிரவோ அல்லது பொதுக் […]

ஐரோப்பா

இடம்பெயர்வோரின் வயதை கணிக்கும் AI தொழில்நுட்பம் : உள்துறை அமைச்சகத்திற்கு அவசரக் கடிதம்

  • June 18, 2026
  • 0 Comments

சிறு படகுகளில் இடம்பெயர்ந்தோரின் வயதை மதிப்பிடுவதற்காக செயற்கை நுண்றிவு கருவியை பயன்படுத்த பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மனிதாபிமான அமைப்புகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முக வயது மதிப்பீட்டு (FAE) தொழில்நுட்பம், பதின்ம வயதினரைத் தவறாக வயது வந்தவர்களாக அடையாளம் காண்பதாகவும், இனப் பாகுபாட்டைக்” கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக,  சஹாரா,  ஆப்பிரிக்காவிலிருந்து வரும் இடம்பெயர்ந்தோரைக் கண்டறிவதில் மிகக் குறைந்த துல்லியத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் 14 வயது சிறுமியை […]

உலகம்

நெதன்யாகு உடனான உறவில் விரிசல்? பகிரங்கமாக எச்சரித்த ட்ரம்ப்

  • June 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாகக் கேள்விக்குட்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதல் மிகவும் வன்முறையானது மற்றும் தேவையற்றது என்று கூறியுள்ளார். ஹிஸ்புல்லாவைக் கையாள்வதற்கு சிரிய அதிபரே மிகவும் பொருத்தமான மற்றும் “திறமையான” நபர் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி, லெபனான் விவகாரத்தில் நெதன்யாகு “மேலும் பொறுப்புடன்” செயல்பட வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா பிரச்சினையை […]