துருக்கியில் 04 ஆவது மாடியில் இருந்து விழுந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு
துருக்கியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று பர்சா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து அப் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணையில் உயிரிழந்தவர் சூடானை பிறப்பிடமாகக் கொண்ட 35 வயதுடையவர் எனவும், இறக்கும்போது அவர் 08 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
அவர் பர்சா நகரில் நான்காவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கணவருக்கு போதைப் பழக்கம் இருந்ததன் காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்த அவர், இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




