உலகம்

ட்ரோன்களின் பயன்பாடு – எச்சரிக்கும் ஐ.நா சபை

  • August 19, 2026
  • 0 Comments

ஆயுதம் ஏந்திய ட்ரோன்களின் அதிகரித்த பயன்பாட்டால் கடந்த ஆண்டில் சாதனை அளவிலான மனிதாபிமானப் பணியாளர்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது. கனடா மற்றும் ஆஸ்திரேலியாவால் நிதியளிக்கப்படும்  உதவிப் பணியாளர் பாதுகாப்புத் தரவுத்தளத்தின்படி, 2025-ஆம் ஆண்டில் சுமார் 907 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 833 ஆக இருந்ததாகவும் அவர்களில், 350 பேர் கொல்லப்பட்ட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் Antonio Guterres, […]

2026 - 27 ஆம் நிதியாண்டில் இந்தியாவின்பொருளாதார வளர்ச்சி 6.80 சதவீதமாகக் குறையும் என 'இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்' (India Ratings and Research) நிறுவனம் கணித்துள்ளது. இலங்கை

மேற்காசிய போர் மற்றும் எல் நினோ தாக்கம்: இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்து

  • August 19, 2026
  • 0 Comments

2026 – 27 ஆம் நிதியாண்டில் இந்தியாவின்பொருளாதார வளர்ச்சி 6.80 சதவீதமாகக் குறையும் என ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ (India Ratings and Research) நிறுவனம் கணித்துள்ளது. மேற்காசியப் போர், உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம், இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு மற்றும் ‘எல் நினோ’வின் தாக்கம் காரணமாகவே இந்நிலை ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2025 – 26-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.60 […]

TID arrests man over alleged fake LTTE Training Camp claim இலங்கை செய்தி

‘விடுதலைப் புலிகள் முகாம்’ குறித்து வதந்தி பரப்பிய நபர் கைது

  • August 19, 2026
  • 0 Comments

கிளிநொச்சி, அக்கராயன்குளம் வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்யானத் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலமும், ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமும் சந்தேகநபர் இந்த போலித் தகவல்களைப் பரப்பியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்படி, அக்கரயன்குளம் காவல் எல்லைக்குட்பட்ட பாலை வனப்பகுதியில் எல்.டி.டி.ஈ […]

உலகம்

மோதலின் மையப் புள்ளி – யார் கை ஓங்கும்?

  • August 19, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான செல்வாக்கிற்கான போராட்டம், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதலில் ஒரு மையப் பிரச்சினையாக மாறியுள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். ஆனால், சமீபத்திய கப்பல் போக்குவரத்துத் தரவுகள் இந்தச் சமநிலை மாறக்கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றன. டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி கப்பல்களைக் கண்காணிக்கும் கடல்சார் பகுப்பாய்வு நிறுவனமான Kpler வெளியிட்டுள்ள கூற்றுப்படி, கடந்த இரண்டு வாரங்களில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற கப்பல் பயணங்களில் 80 சதவீதத்திற்கும் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பின் உத்தரவையடுத்து 5 நாட்களாக சுருக்கப்பட்ட அமெரிக்கா – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி

  • August 19, 2026
  • 0 Comments

தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்தும் ஆண்டாந்திரக் கூட்டு ராணுவப் பயிற்சியின் நாட்களை 11 நாட்களிலிருந்து 5 நாட்களாகக் குறைக்கப் போவதாகவும், களப் பயிற்சிகளைக் கட்டுப்படுத்தப் போவதாகவும் இரு நட்பு நாடுகளும் புதன்கிழமை தெரிவித்துள்ளன. கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியாவிற்கு வருகை தரும் நிலையில் […]

உலகம்

ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – பலர் உயிரிழப்பு

  • August 19, 2026
  • 0 Comments

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் நேற்று தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி 30 தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படும் கூடுதல் சுரங்கத் தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும், ஆனால் அவர்களை உயிருடன் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு “மிகக் குறைவு என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்க செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தியா செய்தி

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

  • August 19, 2026
  • 0 Comments

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் பலர் வந்து நேரில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவின் பரபரப்பான பகுதியில் நடந்த இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை கூறியதாவது: மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் பகுதி மக்கள் நெருக்கடி […]

‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர். இந்தியா செய்தி தமிழ்நாடு

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்து

  • August 19, 2026
  • 0 Comments

‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர். பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்​துள்​ள​தாக அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அருகே வனப்​பகு​தி​யில் 3 தமிழர்​கள் வனத்​துறை​யின​ரால் கடந்த 15-ம் திகதிசுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். மான் வேட்​டைக்கு வந்த போது 3 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​தாக கர்​நாடகா தரப்​பில் கூறப்​பட்​டது. இதுதொடர்​பாகத் […]

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

அமெரிக்க வரிகள் நீக்கம்: GSP+ வரிச்சலுகையை குறி வைக்கிறது இலங்கை

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ” எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே, அமெரிக்கஜனாதிபதி பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியை விதித்தார். அதன்படி, இலங்கை மீது 44 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கத்தால் இதை […]

ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐரோப்பாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அபாயம்

  • August 19, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீ விபத்துக்கான அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தீ மற்றும் அவசரக்கால சேவைகள் கவுன்சில் (AFAC) வெளியிட்டுள்ள தற்போதைய பருவக்காலக் கணிப்பின்படி, இந்த வசந்த காலத்தில் தலைநகர் மண்டலத்தை (ACT) தவிர மற்ற […]