கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்து
‘‘கர்நாடக மாநிலத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகே வனப்பகுதியில் 3 தமிழர்கள் வனத்துறையினரால் கடந்த 15-ம் திகதிசுட்டுக் கொல்லப்பட்டனர்.
மான் வேட்டைக்கு வந்த போது 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கர்நாடகா தரப்பில் கூறப்பட்டது.
இதுதொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் நேற்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதன்போதே மேற்படி சம்பவம் தொடர்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.




