ஈரானிய வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்வு: குடியுரிமை சான்றிதழ் பெற்று நெகிழ்ச்சி
மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் “தேசத்துரோகிகள்” என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள் தற்போது ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். ஈரானிய தேசியக் கீதத்தைப் பாட மறுத்ததன் மூலம் பாத்திமா பசந்தீதே (Fatemeh Pasandideh – 22) மற்றும் அதீபே ரம்சானிசாதே (Atefeh Ramezanisadeh – 34) ஆகிய இரு வீராங்கனைகளும் உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றனர். […]













