இலங்கை

காற்று மாசுப்பாட்டால் ஆண்டுதோறும் 7000 அகால மரணங்கள் பதிவு

காற்று மாசுப்பாட்டின் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 7000 அகால மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவு இயக்குநர் டாக்டர் சந்தனி விதானா நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.

உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 07 தொடக்கம் 08 மில்லியன் மக்கள் காற்று மாசுப்பாட்டின் காரணமாக உயிரிழப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்கள் சுவாசப் பாதை வழியாக நேரடியாக நுரையீரலுக்குள் உள்ளிழுக்கப்படுகின்றன. அவை இரத்த ஓட்டத்திலும் நுழையக்கூடும். இது பல்வேறு சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, அத்துடன் நாள்பட்ட நுரையீரல் நோய்களும் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், மாரடைப்பு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களும் காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்