மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம்
பொதுத் தொந்தரவை ஏற்படுத்தியமை மற்றும் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கொண்டிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக மெட்டா நிறுவனம் 567 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என நியூ மெக்சிகோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மெட்டா நிறுவனம் தனது தளங்களில் குழந்தைகளை எளிதில் ஆபத்துக்கு உள்ளாக்கும் உள்ளடக்கங்களுக்கு அந்நிறுவனமே பொறுப்பு என நடுவர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதனைத் தொடர்ந்து நியூ மெக்சிகோவிற்கு 375 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மெட்டா நிறுவனம் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்தது.
“எங்கள் தளங்களில் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். மேலும், தீய சக்திகளையும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தையும் கண்டறிந்து அகற்றுவதில் உள்ள சவால்கள் குறித்து வெளிப்படையாக இருந்துள்ளோம்,” என்றும் அந்தத் தொழில்நுட்ப நிறுவனம் மேலும் கூறியது.
இறுதி வாதங்களின் போது, அரசு வழக்கறிஞர் லிண்டா சிங்கர், மெட்டாவின் அல்காரிதம்கள் இளம் வயதினருக்கான அபாயங்கள் குறித்த உள் கண்டுபிடிப்புகளை நிறுவனம் மறைத்த அதே வேளையில், பதின்வயது பயனர்களால் பதிவிடப்பட்ட உள்ளடக்கத்தை நோக்கி பெரியவர்களை வழிநடத்தியதாக நடுவர் குழுவிடம் கூறினார்.
இதனைத் தொடர்து 567 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.




