உலகம்

ஈரான் போரால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக தகவல்!

  • August 10, 2026
  • 0 Comments

ஈரான் போர் தொடர்வதால் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கவலைகள் எழுந்துள்ள நிலையில், ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் ஸ்டீவ் ஃபைன்பெர்க் (Steve Feinberg) எழுதியுள்ள குறிப்பாணை ஒன்றில்,  “முக்கியமான திறன்களுக்கான விநியோக அட்டவணைகளை  வேகமாகவும், தீவிரமாகவும் செயல்படுத்துவதற்கும்,   உற்பத்தியை அதிகரிப்பதற்கும்” திட்டங்களைச் சமர்ப்பிக்க,   துறையின் தலைவர்களுக்கு 21 நாட்களுக்கு மேல் அவகாசம் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தொழில் தளத்தை மீண்டும் […]

காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்த: விசாரணைப் பொறிக்குள் சாகர

  • August 10, 2026
  • 0 Comments

காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாகச் செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம்: “அரசாங்கத்திற்குச் சேவை செய்வதைத் தவிர்த்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நேர்மையாகச் சேவையாற்றுமாறு தற்போதைய காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கையின் 37ஆவது காவல்துறை மா அதிபர், நடுவீதியில் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் […]

இலங்கை

நாடு தழுவிய ரீதியில் கிராம அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு

  • August 10, 2026
  • 0 Comments

கிராம அலுவலர்கள் இன்று (10) முதல் நாளை (11) வரை உடல் நல விடுப்பின் கீழ் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பயணப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கிராம அலுவலர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும்  600 ரூபாய் பயணப்படி கடந்த எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதுள்ள பயணப்படிக்கு பதிலாக, 20 லிட்டர் எரிபொருளின் விலைக்கு இணையான படியை […]

உலகம்

சீனாவை தாக்கிய டால்பின் புயல் – கனமழை மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை

  • August 9, 2026
  • 0 Comments

இந்த ஆண்டு சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல புயலான டால்பின் புயல், இன்று மாலை (09) சீனாவின் கிழக்குக் கடற்கரையை அடைந்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டுவந்த இந்தப் புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறித்த கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவை அடைவதற்கு முன்பு, இந்தப் புயல் ஜப்பானின் தெற்கு ஒகினாவா மாகாணத்தைக் கடந்து சென்றது. அங்கு, ஆறு பேர் காயமடைந்ததாகவும், 50,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

உலகம் முக்கிய செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே போரை முடிவுக்கு கொண்டுவர தயாராகும் ட்ரம்ப்

  • August 9, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க தெஹ்ரான் ஒப்புக்கொண்டால், அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் தயாராக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸில் உள்ள மூலோபாய சரக்குப் பாதையில் கப்பல் போக்குவரத்து முழுமையாக மீட்டெடுக்கப்பட்டால், ஈரான் போரிலிருந்து வெளியேறி வெற்றியை அறிவிக்க அமெரிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக, அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தெஹ்ரான் “எந்த விலை கொடுத்தாவது” ஹோர்முஸ் […]

ஐரோப்பா

போர் முனையில் 50,000 வடகொரிய வீரர்கள் – ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

  • August 9, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்காகப் போரிட, 50,000 வரையிலான வட கொரிய வீரர்கள் ரஷ்யாவில் நிலைநிறுத்தப்படுவார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “ரஷ்யாவின் எல்லைக்குள் 30,000 முதல் 50,000 வரையிலான வட கொரியர்களை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதத்தில் 30000 வடகொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்படுவார்கள் என மதிப்பிட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கையைவிட தற்போது அதிகளவிலான வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். (இந்தத் தகவலை அவர் எவ்வாறு பெற்றார் […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் பிரித்தானியா மீளவும் இணைய புதிய முன்மொழிவு

  • August 9, 2026
  • 0 Comments

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் மீண்டும் இணையலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு புதிய ன்மொழிவு, பிரதமர் ஆண்டி பர்னமிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தின்படி, பிரித்தானியா தனது ஆயுதப் படைகளையும் அணுசக்தித் தடுப்புப் பாதுகாப்பையும் ஐரோப்பா முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, சுதந்திரமான நடமாட்டத்தை ஏற்காமலும் யூரோவில் சேராமலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையற்ற வர்த்தக மண்டலத்திற்கான அணுகலைப் பெறும். இந்த முன்மொழிவை முன்னாள் டோரி நாடாளுமன்ற உறுப்பினர் நிக் போலஸ்  (Nick […]

உலகம்

பிலிப்பைன்ஸில் பருவமழை தாக்கம் – 06 பேர் உயிரிழப்பு, இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

  • August 9, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் பருவமழை மற்றும் வெப்பமண்டலப் புயல்களின் தாக்கத்தால் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்  8 பிராந்தியங்களில் உள்ள 110,000 குடும்பங்களைச் சேர்ந்த 382,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்தப் பேரழிவின் காரணமாக 148-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

அரபு உலகில் நேட்டோ தரத்திலான பாதுகாப்பு ஒப்பந்தம் – மேலும் சில நாடுகள் இணைய வாய்ப்பு

  • August 9, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, மேலும் பல நாடுகள் விரைவில் இந்த ஒப்பந்தத்தில் இணையக்கூடும் என்று அங்காரா சூசகமாகத் தெரிவித்துள்ளது. துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் (Hakan Fidan) பெயர் குறிப்பிடாத பிற நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் சேர ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியா, அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் மற்றும் நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவத்தையும், வேகமாக வளர்ந்து […]

ஐரோப்பா

பிரித்தானிய கடல் பகுதிக்கு அருகில் ரஷ்யாவின் கடற்படை நடவடிக்கைகள் அதிகரிப்பு

  • August 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கடல் பகுதிக்கு அருகில் ரஷ்ய கடற்படை நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ரோயல் கடற்படை தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக ஜூலை மாதம் 21 நாட்கள் செலவிட்டதாகவும் கடற்படை  கூறியுள்ளது. 2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரஷ்யக் கப்பல்களைக் கண்காணிக்கும் கடற்படை நடவடிக்கைகள் ஜூலை மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. போர்க்கப்பல்கள் டோவர் ஜலசந்தி மற்றும் வடகடலில் மீண்டும் மீண்டும் பயணித்துள்ளன. “நிழல் கடற்படை” எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ரஷ்யாவின் நியூஸ்ட்ராஷிமி (Neustrashimy) மற்றும் அட்மிரல் கிரிகோரோவிச்  […]