பிரித்தானிய கடல் பகுதிக்கு அருகில் ரஷ்யாவின் கடற்படை நடவடிக்கைகள் அதிகரிப்பு
பிரித்தானியாவின் கடல் பகுதிக்கு அருகில் ரஷ்ய கடற்படை நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ரோயல் கடற்படை தெரிவித்துள்ளது.
மொஸ்கோவின் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக ஜூலை மாதம் 21 நாட்கள் செலவிட்டதாகவும் கடற்படை கூறியுள்ளது.
2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரஷ்யக் கப்பல்களைக் கண்காணிக்கும் கடற்படை நடவடிக்கைகள் ஜூலை மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன.
போர்க்கப்பல்கள் டோவர் ஜலசந்தி மற்றும் வடகடலில் மீண்டும் மீண்டும் பயணித்துள்ளன.
“நிழல் கடற்படை” எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ரஷ்யாவின் நியூஸ்ட்ராஷிமி (Neustrashimy) மற்றும் அட்மிரல் கிரிகோரோவிச் (Admiral Grigorovich) ஆகிய போர்க்கப்பல்களைக் கண்காணிக்க, HMS டைன், HMS மெர்சி மற்றும் HMS செவர்ன் ஆகிய கடலோர ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
ரஷ்யா தனது பழமையான நிழல் கடற்படையைப் பயன்படுத்தி, தனது எண்ணெய் ஏற்றுமதி மீதான சர்வதேசத் தடைகளைத் தவிர்க்கிறது. இது உக்ரைனில் நடக்கும் போருக்கு நிதியுதவி பெற உதவுகிறது.
சரக்குகளைத் தொடர்ந்து பாதுகாப்பதற்காக ரஷ்யா தனது “மதிப்புமிக்க செயல்பாட்டுத் திறனை” பயன்படுத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.




