பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது

  • August 10, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னெடுக்க்பபட்டுவந்த விசாரணை தொடர்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் கைது இடம்பெற்றுள்ளது. முன்னதாகச் செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம், “அரசாங்கத்திற்குச் சேவை செய்வதைத் தவிர்த்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நேர்மையாகச் சேவையாற்றுமாறு தற்போதைய காவல்துறை மா […]

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

  • August 10, 2026
  • 0 Comments

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் வழங்கும் வகையிலான தனித் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்து முன்மொழிந்தார். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-வது இடம் என்பது அவமானம் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்பட வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும் என்றும் […]

ஐரோப்பா

அயர்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற முனைப்பு

  • August 10, 2026
  • 0 Comments

அயர்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் தீவிர முனைப்பில் குடியரசுவாதிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், எல்லையின் இருபுறமும் உள்ள உள்ளூர் சமூகங்கள் மத்தியில்  நிலவும் பதட்டங்களை சாதமாகக் பயன்படுத்தி புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் முனைப்பில் குடியரசுவாதிகள் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. New IRAவின் இந்த பிரச்சாரத்தினால் அயர்லாந்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் தரைவழியாக பிரித்தானியாவிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் சமூக வலைத்தலங்களில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றில், அடையாளம் தெரியாத ஒருவர், […]

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது. அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம்: சட்ட சமருக்கு தயாராகும் சஜித் அணி

  • August 10, 2026
  • 0 Comments

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது. அரசியலமைப்புத் திருத்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தங்கள் கட்சி தொடர்ந்து […]

உலகம்

ஈரானின் உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம்

  • August 10, 2026
  • 0 Comments

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) நீண்டகாலத் தளபதி மொஹ்சென் ரெஸாயி  (Mohsen Rezaei) ஈரானின் உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியிலிருந்து விலகிய முகமது பாகர் ஸோல்கத்ருக்குப் பதிலாக, ரெஸாயி உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் (SNSC) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மொஹ்சென் ரெஸாயி யார்? 1981 முதல் 1997 வரை, ஈரான்-ஈராக் போரின் பெரும்பகுதி உட்பட, IRGC-க்குத் தலைமை தாங்கிய ரெஸாயி, ஈரானின் இராணுவ-பாதுகாப்பு அமைப்பில் மிகவும் அறியப்பட்ட நபர்களில் ஒருவர் ஆவார். அவரது […]

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) குறித்துதான் அநாகரிகமான முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மறுத்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஜப்பான் பிரதமர் குறித்து ஆபாச பேச்சு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

  • August 10, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) குறித்துதான் அநாகரிகமான முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மறுத்துள்ளார். முன்னர் ஒளிபரப்பான இணைய ஒலிபரப்பு (Podcast) வீடியோ ஒன்று மீண்டும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்துள்ளது. அந்த வீடியோவில், வெளிநாட்டுப் பயணங்களின் போது தமக்குக் கிடைத்த மிக “மோசமான பரிசு” எது என்று அல்பானீஸிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருந்த […]

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள யுஜீன் (Eugene, Oregon) நகரில் நடைபெற்ற உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டியில் (World Athletics U20 Championships), ஆஸ்திரேலியாவின் 19 வயதான உயரம் தாண்டுதல் வீராங்கனை ஐசோபெல் லூயிசன்-ரோ (Izobelle Louison-Roe) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். செய்தி விளையாட்டு

தங்கம் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை

  • August 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள யுஜீன் (Eugene, Oregon) நகரில் நடைபெற்ற உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டியில் (World Athletics U20 Championships), ஆஸ்திரேலியாவின் 19 வயதான உயரம் தாண்டுதல் வீராங்கனை ஐசோபெல் லூயிசன்-ரோ (Izobelle Louison-Roe) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இப்போட்டியில் 1.92 மீட்டர் உயரத்தைத் தாண்டி முதலிடம் பிடித்த அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். முன்னதாக 2024 லிமா சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த இவர், தற்போது தங்கம் வென்று தனது […]

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிபந்தனைகளை ஏற்றால் மாத்திரமே ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் மீண்டும் திட்டவட்டம்

  • August 10, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த முக்கிய கடல்வழியை மீண்டும் திறப்பதற்கு முன், அமெரிக்கா நஷ்டஈடு வழங்குதல், பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய […]

இலங்கை

பலத்த காற்று மற்றும் கடல்கொந்தளிப்பு – மீனவர்களுக்கு அறிவுரை

  • August 10, 2026
  • 0 Comments

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது  இன்று (10) காலை 07.00 மணி முதல் நாளை (11) காலை 07.00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும். அதன்படி, மாத்தறை முதல் பொத்துவில் வரையிலான ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60 கிலோமீட்டரைத் தாண்டக்கூடும் மற்றும் இப்பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக […]

“புலிகளை முற்றாக அழித்துத் துடைத்தெறிய வேண்டும் என்பதே எனது வியூகமாக இருந்தது. ஆனாலும் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இலங்கை செய்தி

“புலிகளின் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே முயற்சி செய்தனர்” – பொன்சேகா பரபரப்பு தகவல்

  • August 10, 2026
  • 0 Comments

“புலிகளை முற்றாக அழித்துத் துடைத்தெறிய வேண்டும் என்பதே எனது வியூகமாக இருந்தது. ஆனாலும் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “இராணுவத் தளபதியான எனக்குத் தெரியாமல், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் ராஜபக்சக்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எரிக் சொல்ஹைமுடனும் கலந்துரையாடினார்கள். புலிகளின் சரணடைவு பற்றியே அவர்கள் பேசியுள்ளனர். புலிகளை முற்றாக ஒழிப்பதே எனது […]