உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிபந்தனைகளை ஏற்றால் மாத்திரமே ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் மீண்டும் திட்டவட்டம்

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த முக்கிய கடல்வழியை மீண்டும் திறப்பதற்கு முன், அமெரிக்கா நஷ்டஈடு வழங்குதல், பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.

அதற்கு முன்னர் வரை உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கு இந்த கடல்வழி மிக முக்கியப் பங்களிப்பை வழங்கி வந்தது.

ஹோர்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பான போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான இடைக்கால ஒப்பந்தத்தை எட்ட ஈரானும் ஓமானும் மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், புதிய கப்பல் பாதைகள் நிர்ணயிக்கப்படும்.

நிபந்தனைகள்

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு நஷ்டஈடு வழங்குதல்.

ஈரான் மற்றும் அதன் பிராந்திய தோழமை நாடுகளுக்கு (லெபனான், பாலஸ்தீனம், ஏமன், ஈராக்) எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது.

வளைகுடா பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெறுவது மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது.

முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை நிபந்தனையின்றி விடுவிப்பது.

நேரடிப் பேச்சுவார்த்தை இல்லை

ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தை வாஷிங்டன் மீறியதால், அமெரிக்காவுடன் ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலமாகவே செய்திகள் பரிமாறப்படுவதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி