அயர்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற முனைப்பு
அயர்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் தீவிர முனைப்பில் குடியரசுவாதிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், எல்லையின் இருபுறமும் உள்ள உள்ளூர் சமூகங்கள் மத்தியில் நிலவும் பதட்டங்களை சாதமாகக் பயன்படுத்தி புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் முனைப்பில் குடியரசுவாதிகள் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
New IRAவின் இந்த பிரச்சாரத்தினால் அயர்லாந்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் தரைவழியாக பிரித்தானியாவிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம் சமூக வலைத்தலங்களில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றில், அடையாளம் தெரியாத ஒருவர், புலம்பெயர்ந்தோர் அயர்லாந்தை விட்டு வெளியேறாவிட்டால், ஐ.ஆர்.ஏ அவர்களை வன்முறையால் அச்சுறுத்தும் என்று எச்சரித்துள்ளார். ‘
அயர்லாந்து முழுவதும் உள்ள பல உள்ளூர் சமூகங்கள், அதிக அளவிலான இடம்பெயர்வுகளால் வீட்டுவசதி, பொது சேவைகள் மற்றும் சமூகம் ஆகியவற்றின் மீது சுமத்தப்படும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கைகள் வந்துள்ளன.




