இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சபதம்

“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டு எதிரணி மேற்கொள்ளும்” என்று சட்டத்துறை பேராசிரியரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டு எதிரணி மேற்கொள்ளும்” என்று சட்டத்துறை பேராசிரியரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மிகவும் ஆபத்தானது. அது பாரிய பாதக விளைவுகளையே ஏற்படுத்தும். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது மட்டுமல்லாமல், இது ஏனைய பல ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும்.

எதிர்காலத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் என்பவற்றைக்கூட நீடிப்பதற்கு அரசாங்கம் முற்படக்கூடும்.

இவ்விடயம் தொடர்பாகச் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளதாக மகாநாயக்க தேரர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

ஆனால், அந்த அழுத்தமான கடிதம் குறித்து அரசாங்கம் இதுவரையில் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்போதைக்குத் தேவையில்லை என்பதே மகாநாயக்க தேரர்களின் உறுதியான கருத்தாக உள்ளது.

அரசமைப்பில் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்தை அரசாங்கம் மூடிமறைப்பது ஏன்?” என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை