இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், நடிகை த்ரிஷா பங்கேற்றமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. செய்தி தமிழ்நாடு பொழுதுபோக்கு

சென்னை சுதந்திர தின விழாவில் த்ரிஷாவுக்கு முன்வரிசை ஆசனம்

  • August 15, 2026
  • 0 Comments

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், நடிகை த்ரிஷா பங்கேற்றமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகத் தொடர்ந்து வலம் வரும் நடிகை த்ரிஷா , தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை கோட்டையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ் […]

கா​விரி மேலாண்மை ஆணை​யம் தமிழகத்​துக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்​தர​விட்ட நிலை​யில், கர்​நாடக அரசு 10,000 கன அடி நீரை தமிழகத்​துக்கு திறந்​து​விட்​டுள்​ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

காவிரியில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திற‌ப்பு

  • August 15, 2026
  • 0 Comments

கா​விரி மேலாண்மை ஆணை​யம் தமிழகத்​துக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்​தர​விட்ட நிலை​யில், கர்​நாடக அரசு 10,000 கன அடி நீரை தமிழகத்​துக்கு திறந்​து​விட்​டுள்​ளது. கடந்த 11-ம் திகதி நடந்த காவிரி மேலாண்மை ஆணை​யக் கூட்​டத்​தில் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என உத்​தர​விட்​டது. இதற்கு மறுப்பு தெரி​வித்த கர்​நாடக அரசு, உச்​ச நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​போவ​தாக தெரி​வித்​தது. இந்​நிலை​யில் […]

அமெரிக்கா  தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் கடும் சீற்றம் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை மிகவும் கொடூரமான சக்தி என விமர்சித்துள்ளார். உலகம் செய்தி மத்திய கிழக்கு

அமெரிக்கா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஈரான் வலியுறுத்து

  • August 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா  தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் கடும் சீற்றம் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை மிகவும் கொடூரமான சக்தி என விமர்சித்துள்ளார். அத்துடன், இந்தப் போரின் விளைவாக எரிபொருள் விலையேற்றம் தொடரும் என்பதால் அமெரிக்க மக்கள் அதற்குத் தயாராக இருக்குமாறும் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இதனால் அமைதிப் […]

"2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இலங்கை செய்தி

2029 ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் நாமல் ராஜபக்ச

  • August 15, 2026
  • 0 Comments

“2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “2029 ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். அதற்குரிய சிறந்த வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. அதற்கேற்ப […]

வடக்கு மிச்சிகனில் வெள்ளிக்கிழமை (15) ஐந்து பேரைக் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மிச்சிகன் மாநிலக் காவல் துறை தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

மிச்சிகனை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்: 5 பேரை கொன்ற சந்தேக நபர் சடலமாக மீட்பு

  • August 15, 2026
  • 0 Comments

வடக்கு மிச்சிகனில் வெள்ளிக்கிழமை (15) ஐந்து பேரைக் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மிச்சிகன் மாநிலக் காவல் துறை தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது. மிச்சிகனின் மிஸாக்கி கவுண்டியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து, காலை 11:40 மணியளவில் (1540 GMT) காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அங்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையிலும், நான்காவது நபர் காயமடைந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டதாக […]

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா செய்தி

2047 இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி

  • August 15, 2026
  • 0 Comments

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது பிரதமர் மோடி கூறியவை வருமாறு , “சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை நாம் நினைவு கூரவேண்டும்.வந்தே மாதரம் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் ஒலிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்கிறது; இன்று டெல்லி செங்கோட்டையில் வந்தே […]

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியா செய்தி

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர்

  • August 15, 2026
  • 0 Comments

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 80வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் நாட்டுப்பற்றுடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, […]

"மாகாணசபைத் தேர்தல்: சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க முடியாது' இலங்கை செய்தி

“மாகாணசபைத் தேர்தல்: சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க முடியாது’

  • August 15, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்துகளை முன்வைக்கலாம்; ஆனால், அது தொடர்பாக வெளிநாடுகளால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது” என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை வருகை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்புகையில், “மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அவர் அழுத்தம் கொடுத்துள்ளாரே?” எனக் கேட்டார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “இலங்கை ஒரு சுதந்திர நாடாகும். எனவே, அரசியல் ரீதியாகவோ அல்லது ஏனைய வழிகளிலோ எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. ஆனால், […]

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

  • August 15, 2026
  • 0 Comments

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் பல கடலோரப் பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான சுனாமி அலைகள் பதிவாகின. இருப்பினும், நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. […]

உலகம்

ஜப்பானில் இயற்கை சீற்றத்தால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • August 14, 2026
  • 0 Comments

கிழக்கு ஜப்பானில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சிபா மாகாணம் முன்னெப்போதும் இல்லாத மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.  குறித்த மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 367 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு முன்னர், அக்டோபர் 2023 இல்  24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 309 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்தக் கனமழையால் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகளும் ரயில் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக, டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த […]