அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் காயம் உலகம் செய்தி

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் காயம்

  • August 15, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பல மணி நேரம் அவசரக் கட்டுப்பாடுகள் (lockdown) விதிக்கப்பட்டன. வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Virginia State University) ‘குவாட் அனெக்சஸ்’ (Quad Annexes) பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் பல சந்தேக நபர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும், காயமடைந்த 5 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அவர்களில் […]

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் சொத்து: ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் சொத்து: ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி

  • August 15, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள சமீபத்திய மிரட்டல்களுக்கு ஈரானிய அதிகாரிகள் பதிலடி கொடுத்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக பிரகடனப்படுத்தப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் இருந்து இதுபோன்ற அச்சுறுத்தல் உரைகளை ஈரான் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. அதேவேளையில், அமெரிக்காவின் அறிக்கைகள் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதும், பின்னர் ராணுவ நடவடிக்கை பற்றிய பேச்சுக்களுக்கு மாறுவதுமாக […]

பாடநூல்களை விற்பனை செய்தவர்களுக்கு விளக்கமறியல் செய்தி

பாடநூல்களை விற்பனை செய்தவர்களுக்கு விளக்கமறியல்

  • August 15, 2026
  • 0 Comments

அரசாங்க பாடசாலைகளுக்குரிய சுமார் 8 லட்சம் பெறுமதியான 19,892 பாடநூல்களை, விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், இன்று (15) கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டிற்கான தமிழ் செயல்பாடு மற்றும் பாடநூல்கள் 19,892 […]

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு

  • August 15, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் பலர் பல்வேறு அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பல டஜன் தொடர் அதிர்வுகளால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.  

உலகம் செய்தி

காசாவில் இன்னும் ஓயவில்லை மரண ஓலம்: இஸ்ரேல் தாக்குதலில் 73,391 பேர் பலி

  • August 15, 2026
  • 0 Comments

காசா முனையில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் “போர்நிறுத்தம்” அமுலுக்கு வந்ததில் இருந்து, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,262 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4,168 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 2023 அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரில் இதுவரை குறைந்தது 73,391 பேர் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பிரதேசம்: ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

  • August 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு ஒரு முக்கியச் சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்து வரும் நிலையில், டிரம்பின் கருத்துக்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஈரானுடனான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் தனது நாட்டின் “பிரதேசம்” (territory) என அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் ஆதரவாளர்களிடையே பேசிய டிரம்ப், உலகளாவிய எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரம் விநியோகத்திற்கு மிகவும் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய பழங்குடியின சிறுமியின் மரணம்: மக்கள் அணிதிரண்டு இறுதி அஞ்சலி

  • August 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வடக்கு மண்டல Northern Territory தலைநகரான ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் (Alice Springs), கடந்த ஏப்ரல் மாதம் நாட்டையே உலுக்கிய மற்றும் அப்பகுதியில் வன்முறை மோதல்களை ஏற்படுத்திய ஐந்து வயது பழங்குடியின சிறுமியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான துயருற்ற மக்கள் சனிக்கிழமை திரண்டனர். பழங்குடியின கலாச்சார வழக்கப்படி குமாஞ்சாய் லிட்டில் பேபி (Kumanjayi Little Baby) என அழைக்கப்படும் அச்சிறுமியின் கொலையும், அதைத் தொடர்ந்து சந்தேக நபரைக் கண்டுபிடித்து உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்ட பின்னரான அவரது […]

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் செய்தி

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

  • August 15, 2026
  • 0 Comments

இந்தோனேஷியாவில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாரென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா இலங்கை செய்தி

இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • August 15, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாரென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தூதரக ரீதியிலான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. பயணத்துக்குரிய திகதி விவரம் இன்னமும் அறிவிக்கப்படாத போதும், அதற்கான ஒழுங்குபடுத்தல்களில் பாதுகாப்பு அமைச்சும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இருதரப்பு […]

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், நடிகை த்ரிஷா பங்கேற்றமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. செய்தி தமிழ்நாடு பொழுதுபோக்கு

சென்னை சுதந்திர தின விழாவில் த்ரிஷாவுக்கு முன்வரிசை ஆசனம்

  • August 15, 2026
  • 0 Comments

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், நடிகை த்ரிஷா பங்கேற்றமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகத் தொடர்ந்து வலம் வரும் நடிகை த்ரிஷா , தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை கோட்டையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ் […]