ஜப்பானில் இயற்கை சீற்றத்தால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கிழக்கு ஜப்பானில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சிபா மாகாணம் முன்னெப்போதும் இல்லாத மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 367 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதற்கு முன்னர், அக்டோபர் 2023 இல் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 309 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
இந்தக் கனமழையால் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகளும் ரயில் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் விளைவாக, டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் தவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், கனமழையால் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு, வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அரசு அலுவலகங்களையும் பள்ளிகளையும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




