ஐரோப்பா

நேட்டோ உச்சிமாநாடு : பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் துருக்கி

  • July 6, 2026
  • 0 Comments

அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டிற்காக, துருக்கி ஒரு அசாதாரணமான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வான்பாதுகாப்பு படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 07மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள  32 நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே சாலை கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும், […]

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு என்பது வெறும் தேசிய அளவிலான விடைபெறல் மட்டுமல்ல, தெஹ்ரானில் திரண்டிருந்த அந்த மக்கள் பெருங்கடல், இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த நினைத்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வீழ்த்த நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் கற்பித்த ஈரான் மக்கள்

  • July 6, 2026
  • 0 Comments

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு என்பது வெறும் தேசிய அளவிலான விடைபெறல் மட்டுமல்ல, தெஹ்ரானில் திரண்டிருந்த அந்த மக்கள் பெருங்கடல், இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த நினைத்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கிய போரினால் ஈரான் பலவீனமடைந்ததாகத் தெரியவில்லை. மாறாக, அது சவால்களுக்கு அடிபணியாத, ஒன்றுபட்ட, தங்களின் அடுத்தகட்ட நகர்வை தாங்களே […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கை செய்தி

பதவி விலகுமாறு நீதி அமைச்சருக்கு அழுத்தம்

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பதவியை விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று (06) வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் சுமார் 600 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். ஆனால், அங்கு 2,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர். இந்த இடநெருக்கடிப் பிரச்சினை நீண்டகாலமாகவே நிலவி வருகின்றது. எனவே, தற்போதைய […]

இலங்கை செய்தி

சிறைக்குள் நடந்தது என்ன? விசாரணை தீவிரம்

  • July 6, 2026
  • 0 Comments

07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகள் உயிரிழப்புநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. 23 அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் என்பன விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன எனவும் அமைச்சர் கூறினார். நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் அதனைசூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

உலகம்

ஈரான் மற்றும் கத்தாருக்கு இடையேயான கடல்வழி வர்த்தகம் மீள ஆரம்பம்

  • July 6, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் கத்தாருக்கு இடையேயான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் வர்த்தகத் தூதர்  அப்பாஸ் அப்தோல்கானி (Abbas Abdolkhani)  நேற்று அறிவித்தார். தோஹாவில் உள்ள ஈரானிய தூதரகம் மற்றும் கத்தார் அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, ஈரானின் தயர் துறைமுகத்திற்கும் கத்தாரின் அல் ருவைஸ் துறைமுகத்திற்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார். புவியியல் ரீதியாக எதிரெதிராக அமைந்துள்ள இவ்விரு துறைமுகங்களும் முக்கியமாக பிராந்திய வர்த்தகத்திற்கு உதவுகின்றன. போரின் போது தயர் துறைமுகம் […]

இலங்கை

சிறைச்சாலை வன்முறை – வெளிப்படையான விசாரணைக்கு சஜித் அழைப்பு

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்குலைவையும் நிறுவனத் திறமையின்மையையு காரணமாக குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர், ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​சிறைகளுக்குள் நிகழும் மரணங்களுக்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் […]

“வரி சக்தி 2026” எனும் தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையில் தேசிய வரி வாரம் ஆரம்பம்

  • July 6, 2026
  • 0 Comments

“வரி சக்தி 2026” எனும் தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையான எண்ணமாக மாற்றி, நாட்டில் சுயமாக வரி செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் “வரி சக்தி 2026” என்பது ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஒரு வேலைத்திட்டமாகும். இதன் ஆரம்பத்தைக் குறிக்கும் விசேட தேசிய வரி வாரம் […]

போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும்,காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் இஸ்ரேல்

  • July 6, 2026
  • 0 Comments

போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும்,காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு காசாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் உள்ள அல்-ரஷித் வீதியில் பயணித்த வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் (Dis drone) தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி […]

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2026 ஜூன் 22ம் திகதி திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் மூலம் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே இராஜினாமா செய்த ஆறாவது நபர் ஆனார். ஐரோப்பா செய்தி

அச்சுறுத்தும் ரஷ்யா: பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஐஸ்லாந்துக்கு விஜயம்

  • July 6, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2026 ஜூன் 22ம் திகதி திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் மூலம் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே இராஜினாமா செய்த ஆறாவது நபர் ஆனார். நவீன பிரித்தானிய அரசியலில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாக, ஒரு தசாப்தத்தில் ஏழாவது பிரதமரை எதிர்கொள்ளும் நிலையை மக்கள் இப்போது எதிர்கொள்கின்றனர். மேலும், பெரும்பாலான விவாதங்கள் புதிய பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் ஆண்டி பர்ன்ஹாமைச் சுற்றியே இருந்தாலும், ஸ்காட்லாந்து அரசியலில் பெரும் விளைவுகள் ஏற்பட […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கை செய்தி

சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிறைச்சாலையின் நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை தொடர்பில் நான் ஆழ்ந்த கவலையடைகின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார். […]