சிறைச்சாலை வன்முறை – வெளிப்படையான விசாரணைக்கு சஜித் அழைப்பு
நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்குலைவையும் நிறுவனத் திறமையின்மையையு காரணமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர், ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது, சிறைகளுக்குள் நிகழும் மரணங்களுக்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டினார்.
அமைப்பு ரீதியான மாற்றத்தை வாக்குறுதியளித்து அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் நீர்கொழும்பு சிறையில் நடந்த சம்பவம் தற்போதுள்ள அமைப்பின் தொடர்ச்சியான தோல்வியை எடுத்துக்காட்டுவதாகவும் பிரேமதாச வாதிட்டார்.
சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும், திறமையான சிறை நிர்வாகத்தை உறுதி செய்வதிலும் அரசாங்கத்தின் திறனை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.
மனிதாபிமான சிறை நிர்வாக அமைப்பைப் பேணத் தவறியது கடும் கவலைக்குரிய விஷயம் என்றும், பொதுமக்கள் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மேலும் கூறுகையில், இச்சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.




