புகலிடம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தீர்மானம் – இத்தாலி கடும் எதிர்ப்பு
இடம்பெயர்வு மற்றும் புகலிடம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள புதிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது குறித்து இத்தாலிக்கும் முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
புகலிடம் கோருவோரை அவர்கள் முதலில் நுழைந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், இரண்டாம் நிலை இடமாற்றங்கள் தொடர்பான விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அல்லது அதற்கு ஆதரவு தெரிவித்த ஏழாவது நாடாக அயர்லாந்து மாறியுள்ளது.
அதேபோல் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்துள்ள ஜெர்மனி புகலிட விண்ணப்பம் அளிக்காமல் மற்றொரு நாட்டிற்குச் சென்ற புலம்பெயர்ந்தோரான ‘டப்ளின் வழக்குகள்’ என்று அழைக்கப்படுபவர்களை மீண்டும் அனுமதிக்க வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும் இந்த செயற்பாட்டை இத்தாலி கடுமையாக விமர்சித்து வருகிறது.
ஆகஸ்ட் 12 அன்று நடைமுறைக்கு வந்த சீர்திருத்தத்தை நிராகரித்ததற்காக ஹங்கேரியும் போலந்தும் மீறல் நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றன.
மேலும் ரோம் இல்லாமல் இந்த ஒப்பந்தம் தோல்வியடையும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து, ஐரோப்பிய ஆணையம் இத்தாலியின் நிலைப்பாட்டை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.




