இலங்கை செய்தி

ரம்மியமாக காட்சியளிக்கும் மருதானை ரயில் நிலையம் (படங்கள் இணைப்பு)

  • April 25, 2026
  • 0 Comments

மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. புகையிரத பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மருதானை புகையிரத நிலையத்தின் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகள் மாத்திரம் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பிரதான கட்டிடம் திருத்தப்பட்டதுடன், 05 மற்றும் […]

இலங்கை

கடற்கொள்ளையர்களால் முற்றுகையிடப்பட்ட எண்ணெய் கப்பல் – சிக்கிக்கொண்ட இலங்கையர்!

  • April 25, 2026
  • 0 Comments

சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கப்பலில் இலங்கையை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 17 பேர் கொண்ட பணியாளர் குழுவில் ஒரு இலங்கையர், 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஒரு மியான்மர் நாட்டவர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,500 பேரல்கள் எரிபொருளை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல்,  சோமாலியக் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​துப்பாக்கி ஏந்தியவர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கப்பலும் அதன் 17 பணியாளர்களும் […]

இலங்கை செய்தி

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இரண்டாக உடைந்தது லொறி: இருவர் படுகாயம்!

  • April 25, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர். மொனறாகலை வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு ஏற்றிவந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த சாரதியும், உதவியாளரும் லிந்துலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் உருவாக வாய்ப்பு

  • April 25, 2026
  • 0 Comments

ஜெர்மன் (Germany) நாட்டைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான E.ON, பிரித்தானியாவில் செயல்படும் தனது போட்டியாளர் ஓவோ எனர்ஜி (Ovo Energy) உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்தால், பிரித்தானியாவில் 9.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய எரிசக்தி நிறுவனமொன்று உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் E.ON நிறுவனத்துக்கு சுமார் 5.7 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஓவோ எனர்ஜிக்கு சுமார் 4 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் […]

ஐரோப்பா

முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை உருவாக்கி வரும் ரஷ்யா!

  • April 25, 2026
  • 0 Comments

ரஷ்ய விஞ்ஞானிகள் முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை’ உருவாக்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. AI தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மனிதர்கள் 150 வயதை  எட்டுவது அநேகமாக சாத்தியம் எனக் கூறிய சில மாதங்களுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணியை முதுமை மற்றும் மருத்துவ உயிரியல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சர் டெனிஸ் செகிரின்ஸ்கி […]

உலகம்

சமூக ஊடகத் தடை – நோர்வேயில் புதிய சட்டம்!

  • April 25, 2026
  • 0 Comments

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்த சமீபத்திய நாடாக நார்வே மாறியுள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் பொறுப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளிியிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் (Jonas Gahr Store),  குழந்தைகள் குழந்தைகளாக இருக்கக்கூடிய ஒரு குழந்தைப் பருவத்தை நாங்கள் விரும்புவதால், இந்தச் […]

உலகம் செய்தி

கடற்படை முற்றுகையை அமெரிக்கா கைவிடாவிட்டால் பதிலடி உறுதி: ஈரான் திட்டவட்டம்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்தால் அதற்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்க முந்தைய காலங்களை விட தற்போது தாங்கள் அதிக வலிமையுடன் இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை பகுதியைக் கண்காணித்து வரும் ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்திவருகின்றது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது […]

விளையாட்டு

உறவை கசப்பாக்கிய அந்தவொரு சம்பவம் – 18 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்தார் ஸ்ரீசாந்த்!

  • April 25, 2026
  • 0 Comments

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தன்னைத் தாக்கியதற்காக ஹர்பஜன் சிங்கை மன்னிப்பதாகவும், ஆனால் அந்தத் தாக்குதலை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 2008 ஐபிஎல் தொடரில் நடந்த அந்தச் சம்பவத்தை 18 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்தபோது அவர் இவ்வாறு கூறினார். அந்தத் தொடரில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் உலகப் புகழ்பெற்ற ஒரு கசப்பான நினைவாக மாறியிருந்தது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவரும் நண்பர்களான போதிலும், சமீபத்தில் அதனை அடிப்படையாகக் கொண்டு […]

ஐரோப்பா செய்தி

அன்சாக் தினம் அனுஷ்டிப்பு – உலகம் முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி, லண்டனில் இளவரசி கேட் மலர்வளையம்

  • April 25, 2026
  • 0 Comments

போர்களில் உயிரிழந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து வீரர்களை நினைவுகூரும் அன்சாக் தின (ANZAC Day) நிகழ்வுகள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டன. இதற்கமைய இங்கிலாந்தில், வேல்ஸ் இளவரசி கேட் (Kate ) லண்டனில் உள்ள செனோடாஃப் (Cenotaph) நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார். இதற்கு முன் நடைபெற்ற அதிகாலை நிகழ்வில் இளவரசி ஆன் (Princess Anne) […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் பெரும் தாக்குதல் – ருமேனியாவிலிருந்து அவசரமாக புறப்பட்ட பிரிட்டிஷ் போர் விமானங்கள்

  • April 25, 2026
  • 0 Comments

ருமேனியா (Romania) வான்பரப்பில் போர் விமானங்கள் கண்காணிப்பு பணியில் இருந்த நிலையில், ரஷ்யா (Russia) உக்ரைன் (Ukraine) மீது நேற்றிரவு மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா மொத்தம் 619 ஆளில்லா விமானங்களையும் 47 ஏவுகணைகளையும் ஏவியதாக, உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. இவற்றில் 580 ஆளில்லா விமானங்களும் 30 ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனின் அரசு அவசரகால […]

error: Content is protected !!