கடற்படை முற்றுகையை அமெரிக்கா கைவிடாவிட்டால் பதிலடி உறுதி: ஈரான் திட்டவட்டம்!
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்தால் அதற்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்க முந்தைய காலங்களை விட தற்போது தாங்கள் அதிக வலிமையுடன் இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை பகுதியைக் கண்காணித்து வரும் ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்திவருகின்றது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது தற்காப்புத் திறனை இந்த எச்சரிக்கையின் மூலம் உலகிற்குப் பறைசாற்றுகிறது என சுட்டிக்காட்டப்படுகின்றது.





