ஆண்டி பர்னம் பதவியேற்றப்பின் பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த கும்பல்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்னம் பதவியேற்றப்பின் முதல் தடவையாக ஆங்கிலக் கால்வாயை புலம்பெயர்ந்தோர் கடந்துள்ளனர்.
பிரான்சின் பௌலோன்-சுர்-மெர் (Boulogne-sur-Mer) அருகே கப்பல் ஒன்றில் புலம்பெயர்ந்தோர் ஏறியுள்ளனர். அங்குள்ள எல்லையோர காவல்படையினர் அவர்களை தடுக்க முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த ஆண்டு 12,469 பேர் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 47 சதவீதம் சரிவை குறிக்கிறது.
இருப்பினும், இந்த சரிவுக்கான சரியான காரணங்கள் முழுமையாக இனங்காணப்படவில்லை.
அத்துடன் ஃபெலிக்ஸ்டோவில் (Felixstowe), ஆட்கடத்தல் கும்பல்களுக்குச் செல்வதாக நம்பப்படும் 50 படகுகளையும் இயந்திரங்களையும் தேசிய குற்றவியல் முகமை பறிமுதல் செய்துள்ளது. இது சுமார் 2,000 பேர் கடந்து செல்லும் முயற்சிகளைத் தடுக்கக்கூடும் என நம்பப்படுகிறது.




