ஐரோப்பா

உளவு நடவடிக்கையில் AI தொழில்நுட்பம் – நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பணிநீக்கம்!

  • April 25, 2026
  • 0 Comments

ஸ்கொட்லாந்தில் முறைகேடுகள், ஊழல் மற்றும் குற்றச்செயல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு உளவுத் திட்டம் பயன்படுத்தப்பட்டதை தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் குற்றவாளிகளை கண்டறிவதற்காக இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரகசியமாக பயன்படுத்தியது. இதில் பாலியல் நோக்கங்களுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக மெட் அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வந்தது, கூடுதல் நேரப் பணிக்காகப் பொய்யான […]

செய்தி

நாட்டு மக்களிடம் ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian அந்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு அழுத்தங்களால் நாட்டின் கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானை எல்லா வழிகளிலும் முடக்கி அதிருப்தியை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டே எதிரி நாடுகள் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்கா மட்டும் அல்ல மேலும் பல நாடுகள் ஈரான்மீது பொருளாதாரத் தடைகளை […]

இலங்கை செய்தி

நேற்று தடம் புரண்ட ‘சாகரிகா’ ரயில் தற்போது மீண்டும் தடம் புரண்டது

  • April 25, 2026
  • 0 Comments

‘சாகரிகா’ ரயில் நேற்று (24) தடம் புரண்டிருந்த நிலையில் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று மாலை 06.20 அளவில் இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கடற்கரை மார்க்கமான ரயில் பாதையின் ஒரு வழித்தடம் மீண்டும் தடைப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையில் தற்போது ஒரு வழித்தடத்தில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை தடம் புரண்டிருந்த […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: நால்வர் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் பலியாகியுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் சென்ற ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது. தமது படை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தலைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை

வானிலை மாற்றம் : பல பகுதிகளில் வெப்பநிலை உயர்வு!

  • April 25, 2026
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (25) பிற்பகல் 03.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (26) முதல் அமலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு  பகல் நேரத்தில் “கணிசமான” அளவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு […]

இலங்கை செய்தி

கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும் மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்

  • April 25, 2026
  • 0 Comments

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணங்கள் மேலும் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டன. இக்கட்டணக் […]

உலகம்

ஜப்பானில் தொடர்ந்து நான்காவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ!

  • April 25, 2026
  • 0 Comments

ஜப்பானின் இவாத்தே மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து நான்காவது நாளாக பற்றி எரிகிறது. இதன் காரணமாக 3000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீயால் , ஓட்சுச்சியின் (Otsuchi) இரண்டு மாவட்டங்களில் 730 ஹெக்டேயர் (1,800 ஏக்கர்) பரப்பளவு எரிந்து சாம்பலாகியுள்ளது. 1,300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், ஜப்பான் தற்காப்புப் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு பணிகளில்  ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடியிருப்பு உட்பட 08 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் […]

இலங்கை செய்தி

புறக்கோட்டையில் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

  • April 25, 2026
  • 0 Comments

புறக்கோட்டையின் நான்கு வெவ்வேறு இடங்களில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 04 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து நான்காயிரம் போதை மாத்திரைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த […]

ஐரோப்பா செய்தி

அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர் – பெண் படுகொலை குற்றச்சாட்டில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

  • April 25, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் நகரில் 27 வயது பெண் ஒருவரைக் கொலை செய்ததாக 18 வயதான என்சோ பெட்டாமியோ (Enzo Bettamio) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் துபாய் (Dubai) நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இங்கிலாந்து (United Kingdom) கொண்டு வரப்பட்டு, கமோனன் தியாம்பனிட் (Kamonon Thiambanith) என்பவரைக் கொலை செய்ததாக முறைப்படி குற்றம் சாட்டப்பட்டார். அந்தப் பெண் “ஏஞ்சலா” (Angela) என்றும் அழைக்கப்பட்டார். சனிக்கிழமை அவர் வெஸ்ட்மின்ஸ்டர் […]

உலகம்

பெரும்பாலான அமெரிக்கர்களின் கவலை இதுதானாம்!!

  • April 25, 2026
  • 0 Comments

மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் இறப்பதை விட பணம் தீர்ந்துவிடுமோ என்றே அதிகம் கவலைப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அல்லியன்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்தவர்களில் 67 சதவீதம் பேர் இந்தக் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜெனரேஷன் எக்ஸ் குழுவினர் 73 சதவீதத்துடன் மிகவும் கவலையுள்ள குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் 50 சதவீதமானோர் சந்தை சரியும்போது ஓய்வூதியக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதிக பணவீக்கம் மற்றும் அதிகரித்து […]

error: Content is protected !!