இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடை​பெறுகிறது. இந்தியா உலகம் செய்தி

இந்தியா, தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி இன்று ஆரம்பம்

  • August 18, 2026
  • 0 Comments

இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடை​பெறுகிறது. இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​ப​தற்​காக 85 வீரர்​களைக் கொண்ட இந்​திய ராணுவத்​தின் படைப்​பிரிவு நேற்று தாய்​லாந்து புறப்பட்டுச் சென்​றது. இந்​திய ராணுவத்​தின் சார்​பில் 9-வது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்​பிரி​வின் வீரர்​களும், தாய்​லாந்து ராணுவத்​தின் சார்​பில் 3-ஆவது பட்​டா​லியன் வீரர்​களும் இதில் பங்கேற்​கின்​றனர். இரு நாடு​களின் […]

தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

“தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும்”

  • August 18, 2026
  • 0 Comments

தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார். விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவனின் பிறந்​த​நாளான நேற்​று, அக்​கட்​சி​யின் சார்​பில் கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்​டை​யில் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடை​பெற்​றது. மாநாட்​டுக்கு தலைமை வகித்த திரு​மாவளவன் தனது பேச்​சின் தொடக்​கத்​தில், தனக்கு பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் விஜய், திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், நடிகர் ரஜினி​காந்த், தமிழீழ விடு​தலைப் புலிகள் அமைப்​பைச் சேர்ந்த ஈழவேந்​தன், நடிகர்​கள் […]

"சமித்புர சது" என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD) காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை ஒப்படைத்துள்ளனர். இலங்கை செய்தி

ஓமானில் கைது செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர் சமித்புர சதுவிடம் விசாரணை வேட்டை

  • August 18, 2026
  • 0 Comments

“சமித்புர சது” என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD) காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை ஒப்படைத்துள்ளனர். இண்டர்போல் (Interpol) சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் ஓமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர், அங்கிருந்து இலங்கைக்குப் நாடு கடத்தப்பட்டுள்ளார். மோதரை, (சமித்புர) பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 2025 மார்ச் 22 அன்று ஓமானிற்குத் தப்பிச் […]

Trump says North Korea's Kim has responded to his overtures உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வடகொரியாவுடன் நேரடி ராஜதந்திர தொடர்பை பேண ட்ரம்ப் வியூகம்

  • August 18, 2026
  • 0 Comments

தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளைக் குறைக்குமாறு அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டு, வடகொரியாவை அச்சுறுத்தலற்ற மற்றும் மரியாதையான நாடு என்று வர்ணித்த மறுநாளே, வடகொரியஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது தொடர்புகளுக்குப் பதிலளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில் கிம்முடன் சந்திப்புகளை நடத்தி, கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதுடன் ஒப்பிடுகையில், அவரது தற்போதைய ஆட்சிக் காலத்தில் இந்த உறவுக்குக் குறைந்த முக்கியத்துவமே அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், வடகொரிய ஜனாதிபதியுடன் நேரடி இராஜதந்திர உறவை […]

அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமைதிப் பேச்சு முடக்கம்: போருக்கு தயாராகிறது ஈரான்

  • August 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மற்றும் முக்கிய மூலோபாயப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான முன்னேற்றங்கள் […]

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 54 வது நாளான நேற்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 09 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 108 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 572 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. செய்தி

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ’22’ ஆவது திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிப்பு

  • August 18, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது, இவ்விரு சட்டமூலங்களும் முதலாம் வாசிப்புக்காக நீதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்விரு சட்டமூலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இந்த முன்மொழிவுகளை உடனடியாகக் கைவிடுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே இச்சட்டமூலங்கள் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. […]

உக்ரைன் மீதான போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், 'யாப்லோகோ' (Yabloko) கட்சியின் துணைத் தலைவருமான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு (Lev Shlosberg) 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகம் செய்தி

போரை எதிர்த்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

  • August 17, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், ‘யாப்லோகோ’ (Yabloko) கட்சியின் துணைத் தலைவருமான லெவ் ஷ்லோஸ்பெர்க்கிற்கு (Lev Shlosberg) 11 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பியமை மற்றும் இழிவுபடுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பிஸ்கோவ் (Pskov) நகரில் உள்ள நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஓமான்மீது தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

  • August 17, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஓமான் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பொக்ஸ் நியூஸ் (Fox News) அலைவரிசைக்குத் திங்கள்கிழமை அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஓமான் குறுக்கே நின்றால், அவர்கள் மீது மிகக் கடுமையான குண்டுவீச்சு நடத்துவோம்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நீண்டகாலமாக ராஜதந்திர தூதராகவும் உத்திபூர்வ பங்காளியாகவும் […]

இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது 350-வது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

350 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை

  • August 17, 2026
  • 0 Comments

இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது 350-வது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கை அணியின் கேசர நுவந்துவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 37 வயதான ஜடேஜா, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளையும் தனது வசமாக்கியுள்ளார். முதல் இந்திய இடதுகை பந்துவீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட் […]