இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமனில் (0-0) முடிந்தது. செய்தி விளையாட்டு

36 தடவைகள் கைநழுவிய கோல் அடிக்கும் வாய்ப்பு

  • June 28, 2026
  • 0 Comments

மியாமி நகரில் நடைபெற்ற கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமநிலையில்  (0-0) முடிந்தது. ஏற்கனவே உஸ்பெகிஸ்தான் மற்றும் காங்கோ DR அணிகளைத் தோற்கடித்திருந்த கொலம்பியா, இந்தப் புள்ளியின் மூலம் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் போர்ச்சுகல் அணி இரண்டாமிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு […]

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. எனவே, புதிய சக்தி நாட்டில் தோற்றம்பெறாது. இந்த சக்தி தொடரும் என நம்புகின்றேன் அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி தொடரும்: வாசுதேவ ஆதரவுக்குரல்

  • June 28, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சட்டம் சிறப்பான முறையில் அமுலாகிவருகின்றது” – என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ நாட்டில் சட்டம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கம் பின்னடிக்கவில்லை. சுரேஷ் சலே விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். அவர் உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. ஏனெனில் உடல் பலவீனமடைந்தால் வழக்கு விசாரணையை முன்னோக்கி கொண்டுசெல்ல […]

கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன. உலகம் செய்தி

வெனிசுலாவில் 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்

  • June 28, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது. இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 51,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன. கடுமையான போக்குவரத்து நெரிசல் மீட்புப் பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியதை […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஈரான் என்ற நாடே இருக்காது’ – எச்சரிக்கை முழக்கத்துடன் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

  • June 28, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. நான்கு மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பிற்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை, மற்ற தரப்பு மீறிவிட்டதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தனது சமூக ஊடகப் பக்கத்தில், “நாம் நியாயமாக நடந்துகொள்ள முடியாத ஒரு கட்டம் வரலாம். […]

பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

போலந்தை நோக்கி நகரும் வெப்ப அலை – ஐரோப்பிய மக்கள் பரிதவிப்பு

  • June 27, 2026
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாகப் பல நாடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய மக்கள் இன்றைய தினமும் (27) கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டனர். பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வெப்ப அலை தற்போது போலந்தை […]

சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐரோப்பா செய்தி

உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: இருவர் பலி – பலர் காயம்

  • June 27, 2026
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நேற்று இரவு நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் Sumy பிராந்தியத்தில் ஒருவரும், Dnipropetrovsk பிராந்தியத்தில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், தென்கிழக்கு நகரமான Zaporizhzhia மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். வடக்கு உக்ரைனின் சுமி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது ரஷ்யா […]

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. இலங்கை செய்தி

இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு: முற்றுகைப் போராட்டத்தால் திருமலையில் பதற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரின் மரணத்திற்கு காரணமான அலட்சியப் போக்கைக் கண்டித்தே இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று (26-06-2026), இந்த நிலையத்தின் மூலம் ஆழ்கடல் நீச்சலுக்கு (Diving) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் இதன்போது அவருக்கு […]

"எனது கணவர் சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரெனக் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இலங்கை செய்தி

சுரேஷ் சலே சாகும்வரை சிலர் காத்திருப்பு: மனைவி கவலை

  • June 27, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று அவரது மனைவி மனோரி சலே கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் இன்று சென்று சுரேஷ் சலேவை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “எனது கணவர் சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரெனக் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குப் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளின் […]

ஹிஸ்புல்லா அமைப்பு பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பா கல்வி

இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம்: ஜெர்மன் வலியுறுத்து

  • June 27, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஜெர்மனி வரவேற்றுள்ளது. இந்த உடன்படிக்கை பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்று ஜெர்மனி வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul நம்பிக்கை வெளியிட்டுள்ளார். லெபனான் தனது நாட்டில் ஆயுதக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும், இஸ்ரேலுக்குத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த அமெரிக்காவின் மத்தியஸ்தம் முக்கியப் பங்காற்றியதை அவர் பாராட்டினார். ஹிஸ்புல்லா அமைப்பு பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை […]

பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் ட்ரோன் தாக்குதல்: குவைத் கடும் கண்டனம்

  • June 27, 2026
  • 0 Comments

பஹ்ரைன் நாட்டின்மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களை குவைத் வன்மையாகக் கண்டித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது. அண்டை நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை குவைத் வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கத்திற்கு இத்தாக்குதல்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குவைத்த வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் […]