இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க வேண்டும் லெபனான்
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஜெர்மனி வரவேற்றுள்ளது.
இந்த உடன்படிக்கை பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்று ஜெர்மனி வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
லெபனான் தனது நாட்டில் ஆயுதக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும், இஸ்ரேலுக்குத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த அமெரிக்காவின் மத்தியஸ்தம் முக்கியப் பங்காற்றியதை அவர் பாராட்டினார்.
ஹிஸ்புல்லா அமைப்பு பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் நீண்டகால மோதல்களுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




