ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிரான போர்ச் செலவு 37.5 பில்லியன் டொலர்களாக உயர்வு

  • July 22, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். தீவிர குண்டுவீச்சுகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், போருக்கான அவசர நிதியைக் கோரி, இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தலைவர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுத் கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் […]

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை செய்தி

பிரிட்டன் தூதுவரை சந்தித்தார் ஜீவன் எம்.பி.

  • July 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) அவர்களும் கலந்துகொண்டார். இதன்போது, மலையக மக்கக்கான காணி உரிமை, அவர்களுக்கான பிரித்தானியாவின் உதவிகள், ‘டிட்வா’ புயல் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன. பிரித்தானியத் தூதுவர் குழுவின் […]

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். இலங்கை செய்தி

செம்மணி மனிதப் புதைகுழியை இன்று நேரில் பார்வையிடுகின்றனர் ஐரோப்பிய தூதுவர்கள்

  • July 22, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழியை இன்று புதன்கிழமை நேரில் பார்வையிடவுள்ளனர். செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், அன்றைய […]

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இலங்கை செய்தி

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் விகாரை அமைக்க ஏற்பாடா?

  • July 21, 2026
  • 0 Comments

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படும் இடத்தில், நாளை (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இது தொடர்பாகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இவ்விடயம் […]

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 13 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளாகும். இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 93 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரையில் 467 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 444 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.  

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கையளிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியதாவது: “கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயன்றன. […]

" போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் போர் ஏற்படாது: ஐரோப்பிய தூதுக்குழுவிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

  • July 21, 2026
  • 0 Comments

” போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழ். மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டம் குறித்து ஆராய்வு

  • July 21, 2026
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR), தேசிய நீர்வாழ் உயிரின […]

எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை செய்தி

மோதல் வெடிப்பதற்குள் முடிவு கட்டுங்கள்: யாழ்.மீனவர்களிடமிருந்து முதல்வர் விஜய்க்கு பறந்த செய்தி

  • July 21, 2026
  • 0 Comments

எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா மேலும் குறிப்பிடுகையில், “சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள், குறிப்பாகப் புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த தமிழக மீனவர்கள், எமது […]

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை செய்தி

சர்வதேச விசாரணைகோரி செம்மணியில் நாளை போராட்டம்

  • July 21, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் செம்மணியில் இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் இதனுடன் தொடர்புடைய உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. எனவே, இந்தப் […]