நேபாளத்தில் பேரழிவு: $20.5 மில்லியன் அவசர நிதியுதவி கோருகிறது IOM அமைப்பு
நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் 84,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதநேயத் தேவைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளன.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ள அதேவேளை, சுமார் 4,900 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தேசிய பேரிடர் ஆபத்துக் குறைப்பு மற்றும் மேலாண்மை அதிகாரசபை (NDRRMA) தெரிவித்துள்ளது.
இப்பேரிடரால் வீதிகள், பாலங்கள், சுகாதார மையங்கள் மற்றும் பாடசாலைகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து, வாழ்வாதார இழப்புகளுடன் நிச்சயமற்ற சூழலை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில், நேபாள அரசாங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக 43,000 பேருக்கு நிதியுதவி மற்றும் அத்தியாவசியச் சேவைகளை வழங்க 20.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு the International Organization for Migration (IOM) அவசரமாகக் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அவசரக் கோரிக்கைக்கு அமைவாக, தற்காலிக முகாம்களை நிர்வகித்தல், புகலிடம் அளித்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உதவிகளை அதிகரிப்பதில் IOM கவனம் செலுத்தி வருகிறது.




