உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலங்கை செய்தி

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு

  • July 28, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த ரிட் மனு நேற்று திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர […]

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநில பிரீமியர் (Premier) ஜெசிந்தா ஆலன் (Jacinta Allan) பதவி விலகியுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

விக்டோரியா மாநில பிரீமியர் ராஜினாமா

  • July 28, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநில பிரீமியர் (Premier) ஜெசிந்தா ஆலன் (Jacinta Allan) பதவி விலகியுள்ளார். இது துணை பிரீமியர் பென் கரோல் (Ben Carroll) மாநிலத்தின் அடுத்த தலைவராவதற்கு வழிவகுத்துள்ளது. இன்று காலை, தான் தோல்வியடைக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்புத் தீர்மானத்திற்கு முன்னதாக ஆலன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதேவேளையில், தலைமைப் போட்டிக்கு வருமாறு தொழிலாளர் கட்சியினர் தன்னை அணுகியதாக கரோல் தெரிவித்திருந்தார். டேனியல் ஆண்ட்ரூஸைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு முதல் விக்டோரியாவின் பிரீமியராக […]

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இலங்கை செய்தி

வெளிநாட்டு ஜோடிக்கு சைவநெறி முறைப்படி திருகோணமலையில் திருமணம்

  • July 27, 2026
  • 0 Comments

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருகோணமலை சாம்பல்தீவு பாம் பீச் ரிசோட் விடுதியில் வைத்து யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் முன்னிலையில் மைக்கல் என்பவரும், சன்ரா என்பவரும் இன்று (25) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இதன்போது ஒருவரை ஒருவர் இறுதி மூச்சு வரை இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு செய்து வாழ்வோம் என்று உறுதிகூறி குருவால் வழங்கப்பட்ட உருத்திராக்கம் […]

உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

நீதியரசர்களின் பதவிகாலம் நீடிப்பு: அமைச்சரவை அனுமதி

  • July 27, 2026
  • 0 Comments

உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 107(5) பிரிவின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் தற்போதைய ஓய்வு வயது 65 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய முன்மொழிவின்படி, இது 67 ஆண்டுகளாக நீடிக்கப்படும் என தெரியவருகின்றது. அதே பிரிவின் கீழ், மேல்முறையீட்டு நீதிமன்ற […]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

  • July 27, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, […]

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப் பணி: அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

  • July 27, 2026
  • 0 Comments

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதையெடுத்து, “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அரசு வேலை வழங்கப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்; மேலும் இது தொடர்பான சிபிஐ விசாரணையைப் பாதிக்கும்” […]

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை "நேர்மை வாரம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சத்தியப் பிரமாண நிகழ்வு

  • July 27, 2026
  • 0 Comments

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரம்” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (27) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்புடன் நேர்மை சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், பொதுமக்களுக்கு […]

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு ‘அரசியல் லஞ்சமா’? – சஜித் மறுப்பு

  • July 27, 2026
  • 0 Comments

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு , நீதிமன்றங்களின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும் […]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 24-ஆம் திகதி புதிய சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தது. இலங்கை செய்தி

வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டமூலம் அறிமுகம்

  • July 27, 2026
  • 0 Comments

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 24-ஆம் திகதி புதிய சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 6-ஆம் நாளான இன்று (ஜூலை 27), பொதுத் தேர்வு (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த சட்டமூலம் 2026-ஐ மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். : அவை நடவடிக்கைகள் தொடங்கியது முதல், நீட் […]

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தியா செய்தி

பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி: இந்தியா எச்சரிக்கை

  • July 27, 2026
  • 0 Comments

இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால், இந்தியாவின் பதிலடி கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 1999-ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்ததன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் திகதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. லடாக்கிலுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற 27-ஆவது வெற்றி தின விழாவில், போரில் வீரமரணமடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் […]